உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு; பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு; பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பெயர் மாற்றுவது மூலம் எங்களால் வழங்கப்பட்ட அந்த உரிமையை பாஜ.,வினர் பறிக்கிறார்கள். அவர்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்னை, இது ஏழைகளுக்கு மிகவும் கடினமானது. எனவே, நாங்கள் இதற்காக இறுதிவரை போராடுவோம். நாங்கள் வீதிகளில் போராடுவோம், ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போராட்டம் நடைபெறும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

kulanthai kannan
டிச 18, 2025 17:13

காங்கிரஸ் அரசுகள் நேரு குடும்பப் பெயர்களை சூட்டியது 650 திட்டங்கள், கட்டிடங்களுக்கு. காந்தி பெயர் 50 கூட இல்லை.


Balamurugan
டிச 18, 2025 16:56

முதலில் இந்த திட்டமே தவறானது. இந்த திட்டத்தினால் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுகிறது. ஒரு பயலும் வேலைசெய்யாமல் கூலியை மட்டும் வாங்கிக்கிறானுக. அதுல ஒரு குறிப்பிட்ட தொகை அரசியவாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷனாக போய்விடுகிறது. இந்த திட்டத்திற்கான பணத்தில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலையை உருவாக்கி புதிய வேலைவாய்ப்பை கொடுக்கலாம். முதலில் இந்த காந்தி பெயரை சொல்லி ஏமாற்றும் கயவர்களை கூண்டில் ஏற்றவேண்டும்.


GoK
டிச 18, 2025 15:47

காந்தியை பெயரில் வைத்திருப்பவனெல்லாம் யோக்கியர்களா? பெயரில் என்ன இருக்கிறது திட்டம் நல்லதாக இருக்க வேண்டும் செயலில் செய்யும் முறையில். களவாணிகளை திட்டம் நிறைவெற்ற விட்டால் எந்த திட்டமும் நிறைவேறாது.


Govi
டிச 18, 2025 15:32

முற்றிலும் ஒழிக்க பட வேண்டிய திட்டம்


xyzabc
டிச 18, 2025 15:15

கான்டீன் வடை சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்கு இது நல்ல காரணம்.


M S RAGHUNATHAN
டிச 18, 2025 15:00

பெயரா முக்கியம். சோறு தான்.முக்கியம். மோடி அவர் பெயரையோ, அவர்.குடும்பத்தவர்கள் பெயரையோ, அவர் கட்சியின் முன்னாள் தலைவர்கள் பெயரையோ வைக்கவில்லை. முக்கியமாக கருமாந்திர நிதி பெயரை வைக்கவில்லை.


jaya
டிச 18, 2025 14:20

பாதி திமுக மக்களால் சரியாகச் சொல்ல முடியாது, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம். அதனால்தான், தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி திட்டத்தில் அதற்குப் பெயரிடுவோம். இந்தப் பெயர் கடந்த 5 வருடங்களாக நாம் இப்போது பழகிவிட்டோம்.


Kasimani Baskaran
டிச 18, 2025 14:17

முன்னர் மத்திய அரசு 100% சம்பளம் கொடுக்கிறது போல இல்லாமல் மாநில அரசு 40% பங்களிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையாக ஆகலாம். கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை என்று வரும் பொழுது மத்திய அரசுக்கு அதே செலவு - ஆனால் மாநில அரசுக்கு செலவு அதிகரிக்கும்.


senthil
டிச 18, 2025 13:48

தமிழக மக்களுக்கு நல்லது தான் செய்துருக்காங்க.... இனி ஆட்டை போடமுடியாதுக்கோ...... காந்தி கணக்குல எழுதணும்ன்னா இவனுங்க கைல இருந்து போட்டு தான் எழுதணும் சாமியோ....


kulanthai kannan
டிச 18, 2025 13:41

20 வருடங்களாக இருக்கும் இந்த திட்டத்தால் தூர்வாரப்பட்ட வாய் கால்கள் எத்தனை, நடப்பட்ட மரங்கள் எத்தனை, சீர் செய்யப்பட்ட கிராம சாலைகள் எத்தனை


V Venkatachalam, Chennai-87
டிச 18, 2025 19:37

ஐயே நீங்க இம்புட்டு குழந்தையா இருக்கியளே. திருட்டு தீயமுக காரன்க கிட்டே இது மாதிரி கேட்டா ரொம்ப நக்கலா சிரிப்பானுங்க.


முக்கிய வீடியோ