உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: உலக நாடுகளுக்கு விளக்க புறப்பட்டது இந்திய குழு!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்.,: உலக நாடுகளுக்கு விளக்க புறப்பட்டது இந்திய குழு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க அனைத்துக்கட்சிக் குழு உலக நாடுகளுக்கு பயணம் செல்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான முதல் குழு, டில்லி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரித்து வரும் பாகிஸ்தானின் முகத்திரையை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68hb07lq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் சுயரூபத்தை அம்பலப்படுத்துவர்.இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி., சஞ்ஜய் குமார் ஷா தலைமையிலான எம்.பி.,க்கள் குழு இன்று (மே 21) ஜப்பானுக்கு புறப்பட்டது. இக்குழுவில் பாஜ, மார்க்சிஸ்ட், திரிணமுல் கங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் உள்ளனர்.ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளுக்கு இக்குழு செல்ல உள்ளது. குழுவின் தலைவர் சஞ்ஜய் குமார் ஜா எம்பி கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றுமையுடன் செயல்படுவோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மட்டுமே செழித்து வளர்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குச் சொல்வதே இந்தக் குழுவின் நோக்கம்.நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. பாகிஸ்தான் அரசே பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இதை உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் எடுத்துரைப்போம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நட்பு ரீதியில் போடப்பட்டது. தற்போது இரு நாடுகள் இடையே அந்த சூழல் இல்லை. இவை அனைத்தையும் நாங்கள் உலக நாடுகளிடம் எடுத்துரைப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAJ
மே 22, 2025 01:01

அதாவது .... உலகத்துக்கு பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடுனு தெரியாது அப்படித்தானே??


V Venkatachalam
மே 21, 2025 17:49

குழுவுக்கு எங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள். பலுசிஸ்தான் போனப்புறம் மீதி இருப்பது பாதிகிஸ்தான். அந்த பாதியையும் ஒழித்து விடுங்கள். அங்குள்ள இந்துக்களை பத்திரமாக மீட்டு வாருங்கள்.


SUBBU,MADURAI
மே 21, 2025 17:20

அது யாரு அந்த கூட்டத்துல மங்கலா தெரியிறது கொஞ்சம் கண்ண கசக்கி பாப்போம் ஆத்தாடி கொஞ்ச நாளைக்கு முன்னாடி சீனா கொடியை பின்புலமாக வைத்திருந்த நம்ம கவிதாயினி பிரிவினைவாதம் பேசுபவர்களையும் தேசியவாதிகளாக மாற்றுவதே இந்த மோடிக்கு வேலையா போச்சு..


V Venkatachalam
மே 21, 2025 19:15

சுப்பு அவர்களே உங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறோம். செயற்கை கவிதாயினி பேச்சை நீங்கள் முழுவதும் கேட்கவில்லை போலும். கேட்டிருந்தால் உங்களுக்கு இந்த மாதிரி நம்பிக்கையே வராது. எனினும் மோடிஜி செலக்சன். பொறுத்துக் கொள்கிறோம். மோடி கோ பேக் ஞாபகம் வந்து தொலைக்குது. ‌ ‌