உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டுள்ளது.பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டு கொன்றனர். அந்த கொலைகாரர்களையும், அவர்களின் முகாம்களையும் அழிக்க, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், புதன் அதிகாலையில் இந்திய ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=speumtk4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை குறி வைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கட்டடங்கள் தரைமட்டமாகின; 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தான் தாக்கும் என, நம் படைகள் தயார் நிலையில் இருந்தன. எதிர்பார்த்தது போலவே, நேற்று முன்தினம் நள்ளிரவில், 15 இந்திய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. அவை வழியிலேயே தடுத்து தகர்க்கப்பட்டன.அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து, நம் படைகள் நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தின. அதில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டது. நீண்ட நேரமாக விட்டு விட்டு கேட்ட குண்டு வெடிப்பு சத்தமும், இருட்டில் ஜொலித்த தீப்பிழம்பும் லாகூர் நகரில் பீதியை கிளப்பியது. ஏறத்தாழ ஒன்றரை கோடி மக்கள் வாழும் இரண்டாவது பெரிய பாகிஸ்தானிய நகரம் அது. அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியமும் குண்டு வெடிப்பால் சேதமானது. இதற்கிடையே, இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 16 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் படைகள், பீரங்கி தாக்குதல் நடத்தின.முன்னதாக, பாகிஸ்தானின் முயற்சிகள் குறித்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. 'அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்புர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய், புஜ் ஆகிய நமது நகரங்களை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அதை ஒருங்கிணைந்த, 'யு.ஏ.எஸ்., கிரிட்' எனப்படும் ஆளில்லாத வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு வாயிலாக எதிர்கொண்டு நடுவானில் தடுத்து அழித்தோம். அந்த தாக்குதலுக்கு இணையாக, அதே பாணியில் நம் படைகளும், பாகிஸ்தானின் ராணுவ மையங்கள், வான்வழி பாதுகாப்பு கவச முறைகளை குறி வைத்து பதிலடி கொடுத்தன. இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு கவச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் பலி

எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இரவில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டனர். மற்ற இடங்களில் மூவர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் உயிரிழந்தவர்களில், ஹரியானாவை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ராணுவ வீரரும் அடங்குவார்.

பாக்., சிப்பாய்கள் காயம்

பாகிஸ்தானின் லாகூரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில், நான்கு சிப்பாய்கள் காயம் அடைந்ததாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேலிடம் வாங்கி இந்தியா அனுப்பிய 25 'ஹார்பி' ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

ஊடுருவி தாக்கும் இஸ்ரேல் ட்ரோன்

பாகிஸ்தான் நகரங்களை குறிவைத்து இந்தியா நேற்று ஏவிய ஹார்பி ரக ட்ரோன்கள் மிகவும் துல்லியமாக வேலையை முடிக்கும் ஆற்றல் கொண்டவை. ஆசியாவில் இது போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை. எதிரியின் ரேடார்களில் சிக்காமல், ஊடுருவி நுழைவது இதன் சிறப்பம்சம். இலக்கை தேடிப் பிடித்து, தேவைப்பட்டால் வானில் காத்திருந்து தகுந்த நேரத்தில் தாக்கி தகர்க்கக் கூடியது. பகல், இரவு எந்த நேரமாக இருந்தாலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, ஒன்பது மணி நேரம் வானில் வட்டமிட வல்லது.

சுதர்சன சக்கரம்!

பாகிஸ்தான் நமது நகரங்களை குறி வைத்து அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான எஸ் - 400 என்ற வான்வழி பாதுகாப்பு கவச முறையும் முதல் முறையாக நேற்று பயன்படுத்தப்பட்டது.சுதர்சன சக்கரம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்து புராணங்களில், பகவான் விஷ்ணு மற்றும் கிருஷ்ணர், சுதர்சன சக்கர ஆயுதத்தை வைத்திருப்பர். இது வேகமாகவும், துல்லியமாகவும், எதிரிகளை அழிக்கும் திறன் உடையது. அதுபோன்ற வசதிகள் உள்ளதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில், 36 வகையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அவற்றை தடுத்து அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ரேடார் இதில் உள்ளது. தற்போது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவீன நீண்ட தூர வான் பாதுகாப்பு முறையாக இது உள்ளது. இது, 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளது. மிக வேகமாகவும், மிக மெதுவாகவும் சென்று இலக்கை கண்டுபிடித்து துவம்சம் செய்துவிடும். இந்த பாதுகாப்பு முறை தற்போது முதல் முறையாக நம் படைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஸ்குவாட்ரன்கள் வாங்க திட்டமிட்டு, மூன்று வந்துள்ளன. மற்றவை அடுத்தாண்டு வரும். ஒரு ஸ்குவாட்ரன் என்பது, 16 ட்ரோன்கள் அடங்கியது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kundalakesi
மே 09, 2025 18:20

5-6 நாடுகளாக பொற்கிஸ்தான் பிரிய வேண்டும்


R.PERUMALRAJA
மே 09, 2025 13:06

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி இருக்கும் மிச்ச பாகிஸ்தானிய நகரங்களை அழித்து, பின் பாகிஸ்தானியர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டும் நமது ராணுவ பலத்தை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் இவர்கள் பங்களாதேஷை இப்போது ஏமாற்றி கொண்டிருப்பது போல உலக நாடுகளை ஏமாற்றி கொன்றிப்பர் .


ramesh
மே 09, 2025 12:01

1971 இந்தியா பாக்கிஸ்தான் போரில் வங்கதேசம் உருவானது . 2025 போரில் பலுசிஸ்தான் என்ற புதிய நாடு உருவாக வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் புதிய மாநிலமாக இணைக்க படவேண்டும். அங்கே உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கும் விரட்டி அடிக்கப்படவேண்டும்


பாமரன்
மே 09, 2025 08:45

கிட்டத்தட்ட போர் சூழ்நிலை வந்தும் இரு நாடுகளும் இதுவரை போர் பிரகடனம் செய்யலை. அமிரிக்கா கொஞ்சமா ரியாக்சன் குடுத்ததும் சீனா இதுவரை வாய் திறக்காமல் இருப்பதும் சந்தேகத்தை வரவழைக்கிறது. இன்றைக்கு எல்லாரும் கொண்டாடும் சுதர்சன சக்கரம் முழுவதுமாக ரஷ்ய ஆத்மநிர்பர்பர்புர்புர் திட்டத்தில்.... அதாவது சீன பொருட்களுடன் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதுன்னு எத்தனை பேருக்கு தெரியும். அதனால் அதை மட்டுமே நம்பியிராமல் ஒரு வேளை வார் டிக்ளேர் ஆனால் இரண்டு முக்கிய வேலையை செய்ய தயாராக இருக்கனும் இந்திய ராணுவம். முதலாவதாக கராச்சி துறைமுகத்தை பிடித்து பெரும் சேதத்தை உண்டு பண்ணனும்... ரெண்டாவது பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கையகப்படுத்தனும். இது ரெண்டையும் செஞ்சிட்டாலே கிட்டத்தட்ட நமக்கு முழு வெற்றி. கடைசியாக சீனாவின் அமைதி இதில் கவனிப்புடன் இந்தியா இருக்க வேண்டும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 09, 2025 18:23

புதியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக திரு.பாமரன் அவர்களை மத்திய அரசு நியமித்தது உள்ளது.... பாகிஸ்தானை பிடித்தவுடன் அடுத்து சீனாவை மண்டியிட வைப்பேன் என்று புதிய ஆலோசகர் சூளுரை....!!!


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 08:07

பாதுகாப்புத் தளவாடங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யவும் மாட்டோம்.. வாங்கவும் மாட்டோம்... வாங்கினால் அதில் ஊழலைத்தவிர வேறு எதுவும் செய்யமாட்டோம்.. இதுதான் காங்கிரசின் ஆட்சிக்காலத்தில் கொள்கையாக இருந்தது.. மோடி தலைமையிலான அரசின் இதே முனைப்பு முப்பதாண்டுகளுக்கு முன்பு காட்டப்பட்டிருந்தால் இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக என்றோ வளர்ந்திருக்கும். பாகிஸ்தானோ, சீனாவோ வாலாட்டியிருக்க வாய்ப்பில்லை ......


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 13:27

ஒரே கோணத்தில் சிந்திக்கக் கூடாது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 08:02

மதத்தைக் கேட்டு சுட்டவனுங்க இப்பம் சிக்கினா பாக் மக்களே அவனுங்களைப் போட்ருவாங்க ....


Kasimani Baskaran
மே 09, 2025 03:42

சீன மற்றும் அமெரிக்க டப்பா விமானங்களை அழிக்க வேண்டும். அணுவாயுதம் வைத்திருப்பதாக சொல்லப்படும் இடங்களை முதலில் கைப்பற்றி அழிக்க வேண்டும். அடுத்த 50 வருடங்களுக்கு எழுந்திரிக்க வாய்ப்பில்லாமல் செய்ய வேண்டும்.


தாமரை மலர்கிறது
மே 09, 2025 00:21

இப்போது இந்தியாவை ஆள்வது காங்கிரஸ் ஆட்சி அல்ல என்பதை நினைவில் கொண்டு, பாகிஸ்தான் இன்னொரு காசாவாக மாறுவதற்கு முன், இந்தியாவிடம் அடிபணிவது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை