உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் சம்பவம்

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும் போது நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய சம்பவம் தெரிய வந்துள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cewaw41a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைநகர் டில்லியில் இருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 6E 2482,மொத்தம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானிகள் தரையிறக்கினர். விமானம் தரையிறங்கிய பின்னர், மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழும்ப செய்திருக்கிறார். மீண்டும் வானை நோக்கி பறந்த விமானம் மூன்று முறை வட்டமடித்தது.பின்னர் சிறிதுநேரம் கழித்து பாதுகாப்பாக ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியது. அதில் இருந்த 173 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கின்றனர். சரியான நேரத்தில் சமயோசிதமாக விமானிகள் எடுத்த முடிவு விமானம் விபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமைந்தது. ஒப்பீட்டு அளவில் பாட்னா விமான நிலைய ஓடுபாதை குறுகிய தூரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

KRISHNAN R
ஜூலை 16, 2025 16:10

ஆம்.. 1/2/25..அன்று சென்னை யிலிருந்து கொழும்பு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன்.. அங்கு தரையிறங்கும்.. நிலையில்.. மீண்டும் எழுந்து வட்டமடிதிய பின் இறங்கியது


Varadarajan Nagarajan
ஜூலை 16, 2025 15:59

சமீபகாலமாக விமானங்களுக்கும் போதாதகாலம். அடிக்கடி கோளாறுகளில் சிக்கிக்கொள்கின்றது.


Ram
ஜூலை 16, 2025 14:45

இது விமானியின் தவறு , துறை ரீதியான நடவடிக்கை thevai


ரங்ஸ்
ஜூலை 16, 2025 13:41

இப்ப விமான பயணம் என்ன தப்பு நடக்குமோன்னு பயமா இருக்கு.


Dr.Arun
ஜூலை 16, 2025 13:19

இது போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் நடந்தது. சென்னை மதுரை இண்டிகோ விமானத்தில் மதுரைக்கு வந்துகொண்டிருந்தேன். மதுரையில் தரை இறங்கிய விமானம் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடி மறுபடியும் மேலே எழும்பிச் சென்றது. பயணிகள் அச்சத்தில் உறைந்து விட்டனர். நல்லபடியாக மேல் எழும்பிய விமானம் ஒரு பெரிய வடடம் அடித்துவிட்டு பத்திரமாக மீண்டும் தரை இறங்கியது.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2025 12:56

மற்ற விமானிகள் தொடர்ந்து சிரமமின்றி தரையிறக்கும்போது இவர்களுக்கு மட்டும் என்ன கஷ்டம்? தவறை பாராட்டுவது ஏன்?


சிவம்
ஜூலை 16, 2025 12:52

பாராட்டுவது கிடக்கட்டும். முதலில் தவறு யாரால் நடந்தது என்று விசாரணை நடத்த பட வேண்டும். தவறு செய்தவர் தண்டிக்க பட வேண்டும்


Ramesh Sargam
ஜூலை 16, 2025 12:14

விமானிகள் முதலில் தவறு செய்தனர். பிறகு சமயோசிதமாக விமானத்தை தரையிறங்கி விபத்து ஏற்படாமல் செய்தனர். இந்த விமானிகளின் செயல்களை மெச்சுவதா அல்லது ஓடுதளத்திற்கு முன்பே விமானத்தை தரையிறக்க முயற்சித்தது தவறு என்று திட்டுவதா?


Senthoora
ஜூலை 16, 2025 14:29

செய்தியை சரியாக படியுங்க, கட்டுப்பாடு அறையில் இருந்து சொன்னதால் இறக்கினார்கள்.


Veeraraghavan Jagannathan
ஜூலை 16, 2025 12:09

"Go Around" என்பது மிகவும் சாதாரணமாக நடக்கக் கூடியது. இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை


rajasekaran
ஜூலை 16, 2025 11:38

விரிவு படுத்த வேண்டும்.


புதிய வீடியோ