உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரை சேர்ந்த சிலரால் அமைதி கெடுகிறது: உமர் அப்துல்லா

காஷ்மீரை சேர்ந்த சிலரால் அமைதி கெடுகிறது: உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: '' காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலரால் தான் அமைதியும், சகோதரத்துவமும் கெடுகிறது'', என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.ஹரியானாவில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் காரை வெடிக்கச் செய்த டாக்டர் உமர் நபியும் காஷ்மீரை சேர்ந்தவன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உமர் அப்துல்லா கூறியதாவது: இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதை எந்த மதமும் நியாயப்படுத்தாது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலர் தான், அமைதியையும், சகோதரத்துவத்தையும் கெடுக்கின்றனர். காஷ்மீரில் இருக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற ஒரே பார்வையில் பார்த்தால், மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு சிக்கலை ஏற்படுத்தும்.கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அப்பாவி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்கு முன்பு நாம் பல்கலை பேராசிரியர்களைப் பார்த்தது இல்லையா? படித்தவர்கள் பயங்கரவாத விஷயங்களில் ஈடுபடுவதில்லை என்று யார் கூறுகிறார்கள் அவர்களும் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் விசாரணை என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏன் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. நிலைமையை அமைதியாக வைத்திருக்க மத்திய அரசுக்கு மட்டும் நாங்கள் உதவ முடியும். அதனை நாங்கள் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Barakat Ali
நவ 14, 2025 10:47

உங்களது அரச வம்ச குடும்பங்களே காரணம் ......


duruvasar
நவ 14, 2025 10:43

தமிழ்நாட்டை பார்த்து திருந்துங்க. நாங்க தேசிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் யாராவது கண்டனம் தெரிவிச்சோமா .


c.mohanraj raj
நவ 14, 2025 10:40

அந்த சிலர் யார் என்று சொல்ல முடியுமா? முஸ்லிம்களை கிறித்தவர்களை ஹிந்துக்களா முஸ்லிம் தாண்டா எப்பொழுதும் உலகத்திற்கு பிரச்சனை


sankaranarayanan
நவ 14, 2025 09:55

இப்போது புரிகிறதா உமர் அப்துல்லா மோடியை நம்பு அவர்க்கு பக்க துணையாக நில்லு இழந்த காஷிம்மிர் மீட்க ஒரே வாய்ப்பு அதுதான் மோடியுடன் சேர்ந்து அரசாண்டால் இழந்ததை மீட்கலாம் இல்லையேல் இருப்பதையும் மீண்டும் இழக்கலாம் எது உனக்குத்தேவை என்று நீயே புரிந்துகொண்டு சாமர்த்தியமாக செயல்படு


V RAMASWAMY
நவ 14, 2025 09:24

உங்கள் குடும்பம் தானே காஷ்மீரை ஆண்டுவந்தது, வளர்த்தது நீங்கள் தானே. தற்போது நீங்கள் தானே முதல்வர், ஏன் முன்னெச்செரிக்கைகள் எடுக்கவில்லை? இப்பொழுதாவது களை எடுங்கள்.


ரஹிம் பாய், வேலூர்
நவ 14, 2025 07:55

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஒரு துளி விஷம் அதை போல ஒரு சிலர் என்றாலும் நீங்கள் மொத்தமும் தீவிரவாதிகள்...


Indian
நவ 14, 2025 10:03

இது யாரப்பா


Kasimani Baskaran
நவ 14, 2025 04:12

இது போன்ற சதித்திட்டங்களுக்கு குறிப்பிட்ட மதத்தினர் வாழ்க்கையை பறி கொடுப்பது சர்வ சாதாரணம். அடிப்படை காரணம் மதம். அதனை தடை செய்தால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம். குறைந்த பட்சம் மதத்தலைவர்கள் சர்ச்சை மிகு கருத்துக்களை மத புத்தகங்களில் இருந்து நீக்கலாம். மசூதிகளில் அது போன்ற கருத்துகளை விவாதிக்க விடாமல் தடுக்கலாம்.


rama adhavan
நவ 14, 2025 03:41

எதற்கு இவ்வளவு சப்பைகட்டு. நேரடியாக சொல்ல வேண்டியதுதானே? என்ன தயக்கம்?


Ramesh Sargam
நவ 14, 2025 00:41

தவறு உமர் அப்துல்லா அவர்களே. இந்தியாவில் உள்ள பல அமைதி மார்க்கத்தினரால் இந்தியாவின் அமைதி குலைக்கப்படுகிறது. அவர்கள் சீக்கிரம் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் அழிக்கப்படுவார்கள். நீங்கள் அந்த பட்டியலில் இல்லையென்று நாம் நினைக்கிறோம்.


ஈசன்
நவ 13, 2025 21:46

பரவாயில்லையே, கண்டுபிடிச்சிட்டாரே....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை