உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி பாதைக்கு இந்திய பொருளாதாரம் திரும்பும்: கோயல் நம்பிக்கை

வளர்ச்சி பாதைக்கு இந்திய பொருளாதாரம் திரும்பும்: கோயல் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் காலகட்டத்தின் போது, கொள்கை முடிவுகள் மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்பே. இதனால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செலவினம் குறைந்து, வளர்ச்சி சரிந்தது. இதன் பிரதிபலிப்பே இரண்டாம் காலாண்டு முடிவில் வெளிப்பட்டது.ஆனால், நடப்பு காலாண்டின் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மீண்டெழுந்துள்ள உள்கட்டமைப்பு செலவு உள்ளிட்டவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Saleem
டிச 13, 2024 13:19

தற்போது இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்


pmsamy
டிச 13, 2024 11:03

இதுவரைக்கும் இந்தியா வளர்ச்சி பாதையில் போகல அப்படிங்கறதையும் சொல்லிட்டார்


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 10:52

கடந்த புதன் பெங்களூரு to சென்னை வந்தே பாரத்தில் வந்தேன். Official என்பதால் செகரெட்டரி, டிக்கெட் புக் பண்ணிட்டார் கோச் மொத்தமும் 7 பேர் தான் மற்ற கோச்களிலும் இதுவே தான் நிலை. Fare : Rs. 990. இதுவே, AC seater பஸ்களில் Rs. 550 தான். போன சனிக்கிழமை சேலம் to கோவை காரில் போனேன். நல்ல சாலை. ஆனால் இன்னும் விரிவாக்கப் பணிகள் பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிற தைப் பார்த்தேன். எதுக்கு? ஏன் கோடிகளைக் கொண்டு போய் சாலைகளில் கொட்ட வேண்டும்?? எதார்த்தமா எழுதினால் டாஸ்மாக் என்று ஏதோ உளறுகிறார்கள்.


ghee
டிச 13, 2024 11:18

வந்தே பாரத் எதிர்க்கும் நீங்கள் ஏனய்யா அதில் வந்தீர்கள்?பஸ்சில் போகலாமே.... ஓ நீங்கள் டிக்கெட் வாங்காமல் செல்பவரா???


hari
டிச 13, 2024 11:24

பாவம் சொந்த கதை சோக கதை.... நம்பிட்டோம்


udai
டிச 13, 2024 11:55

so you have made loss to government by booking costly ticket??


பாமரன்
டிச 13, 2024 12:13

இந்த ghee மாதிரி அரைகுறைகளை வச்சிக்கிட்டு தமிழ்நாட்டில் தாமரை மல்லார போகுதாம்... இதுகளை நம்பும் வார் ரூம் ஓனர், அவர் பாஸ் மற்றும் அவரிடம் கான்டராக்ட் போட்டிருக்கும் உண்மையின் பாவம் தான்...


அப்பாவி
டிச 13, 2024 15:41

எதுக்கு கவலைப் படறே. வந்தே பாரத் காலியாப் போனா படுத்துக்கிட்டே போ.


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 08:47

இதுவரை இந்திய பொருளாதாரத்தை பாஜக அழிவுப் பாதையில் தள்ளிவிட்டது இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புங்க. அதுக்கு முதலில் செய்ய வேண்டியது, எல்லா தண்ட வந்தே பாரத் ரயில்களையும் நிறுத்துங்கள். அனாவசியமாக நெடுஞ்சாலை விரிவாக்கம் புண்ணாக்கு ப்ராஜெக்ட்களையும் நிறுத்துங்கள். அரசின் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன, அவற்றைக் கண்டறிந்து ஒழியுங்கள்.


ghee
டிச 13, 2024 09:18

gst officer, gazetted officer...பொருளாதார மேதை சொல்றாரு நம்புங்க. இவரு சொல்றத கேளுங்க


வீரா
டிச 13, 2024 09:20

வந்தே பாரத், நல்ல சாலைகள்...எதுவுமே வேண்டாம். இங்கேயே தமிழ்நாடு பின்தங்கி இருக்கு. டாஸ்மாக் அறிவே


N Sasikumar Yadhav
டிச 13, 2024 09:48

கோபாலபுர கொத்தடிமைகளின் அறிவு அப்படியே புல்லரிக்க வைக்கிறது. நாட்டிற்கு வளர்ச்சி முன்னேற்றம் தன்னிறைவு என எதுவும் வரவிடமாட்டானுங்க திராவிட மாடல் கட்சிக்காரனுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 11:02

செய்தியைச் சரியாகப் படிக்காமல் கருத்துப்போட்டு பல்பு வாங்கக்கூடாது ..... இதோ: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து ........ அவர் ஜூலை 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான வளர்ச்சி குறித்தே பேசியுள்ளார் .....


R.RAMACHANDRAN
டிச 13, 2024 07:58

வரி மேல் வரி போட்டு மக்களை வதைத்து பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக ஆக்குகின்றனர்.உதாரணமாக இறக்குமதி எய்யும் என்னை வகைகளுக்கு 20 சதவிகிதம் வரியை கூட்டியதால் அவை மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது.அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்று கொண்டு அரசு நிதியத்தை கொள்ளை அடிக்கச் செய்வதை தடுக்காமல் எதை எதையோ செய்து இவர்களால் தான் நாடு வளர்கிறது என்கின்றனர்.


அப்பாவி
டிச 13, 2024 07:19

2020ல் நிர்மலா ஜீ குடுத்த 20 லட்சம் கோடி மாதிரி இப்பவும் குடுங்க. கொஞ்ச நாளைக்கி வளரும்.


Kasimani Baskaran
டிச 13, 2024 06:02

உலகப்பொருளாதாரமே குப்புறப்படுத்து இருக்கும் பொழுது இந்தியா வளர்வதே பெரிய விஷயம்.


Dharmavaan
டிச 13, 2024 07:50

திமுக ஒத்தடிமை மடையங்களுக்கு இது புரியாது


சமீபத்திய செய்தி