உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே ஒடுபாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்; பயணிகள் பீதி

ஒரே ஒடுபாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்; பயணிகள் பீதி

ஆமதாபாத்: ஆமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.நேற்று இரவு 164 பயணிகளுடன் ஆமதாபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானம், அதற்கான நிறுத்துமிடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்காக ஓடுதளப் பாதையில் திடீரென வந்ததால், இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்தித்தன. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர்.இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் அங்கிருந்து பாதுகாப்பாக மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தால் இண்டிகோ விமானம் புறப்படுவதில் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; ஆமதாபாத் - மும்பை இடையேயான விமானம், புறப்படுவதற்காக ஓடுதளப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு விமான நிறுவனத்தின் விமானம் எதிர்பாராதவிதமாக எங்கள் விமானத்தின் பாதையில் வந்தது. இதனால், எங்கள் விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் தாமதமானது. பின்னர் அந்த விமானம் மாற்றுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, எங்களது விமானம் புறப்பட்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Aam Aathmi (Mango Man)
ஜூன் 25, 2026 20:55

பயணிகள் எப்படி பார்க்க முடியும் ?


GV Ganesan
ஜூன் 25, 2026 12:39

எதிர்பாராத இப்படிபட்ட சம்பவங்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் நடப்பதால், முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும், அதுவும் உடனடியாக?


JeevaKiran
ஜூன் 25, 2026 12:30

ATC கண்ட்ரோல் ரூமில் இருப்பவர்கள் தூங்கி வழிந்தால் இப்படித்தான் ஆகும், அரசு ஊழியர். கை நிறைய சம்பளம். ஆனால் வேளையில் மட்டும் அக்கறை இல்லை? ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை