உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்

இதுவரை 17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றி, உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய பிரதமர் என்பதை உறுதி செய்துள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவித்துள்ளது. கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று நமீபியா சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது, அந்நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நமீபியா நாட்டின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன்மூலம், பல ஆண்டுகளாக காங்கிரஸ் பிரதமர்கள் செய்த செயலை, இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனியொரு ஆளாக செய்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7100vy63&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டின் உரையாற்றியுள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவத்துள்ளது. இது குறித்து பா.ஜ., வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'இந்த சுற்றுப்பயணத்தின் போது, கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் 17 நாடுகளின் பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஒட்டுமொத்தமாகவே 17 நாடுகளின் பார்லிமென்டுகளில் உரையாற்றியுள்ளனர். உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்,' என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பிரதமர்களான மன்மோகன் சிங் 7 முறையும், இந்திரா காந்தி 4 முறையும், நேரு 3 முறையும், ராஜிவ் 2 முறையும், பி.வி.நரசிம்மா ராவ் ஒரு முறை என மொத்தம் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரைநிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 10, 2025 20:09

டிரம்பு சிபாரிசு செய்து மோடிஜீ க்கு நோபல் பரிசு தரணும். இந்திய இந்துவிரோத கும்பல்களுக்கு வயிறு எரிய வேண்டும்.


venugopal s
ஜூலை 10, 2025 17:47

ஆனால் அங்கு எல்லாம் அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால் பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்!


vivek
ஜூலை 10, 2025 21:45

துண்டு சீட்டு முட்டு


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 10, 2025 16:53

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தவிர்த்து இவரை வர்கள் பாராளுமன்றங்களில் பேச அளித்த நாடுகள் எவை என்று பாப்போம் . பூடான் , நேபாள் ,ஸ்ரீலங்கா , மங்கோலியா , மாலத்தீவு , மொரீஷியஸ்ஸ், கயானா , ஃபீஜி, கயானா , உகாண்டா , டிரினிடாட் & டோபாக , நமீபியா , ஆப்கனிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ....நீங்களே முடிவு செய்துகொள்ளுங்க ... மோடி பவிசு எந்த மாதிரி நாடுகளில் என்று இப்படிப்பட்ட சிறிய நாடுகள் கூட சமீப போரில் நமக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை மன்மோகன் சிங் நான்கு நாட்டு பாராளுமன்றங்களில் பேசி உள்ளார் ... அவை முறையே அமெரிக்க , நெதர்லாந்து , தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து .... நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்க ..... எதில் மரியாதை அதிகம் என்று ....


Selvaraj Thiroomal
ஜூலை 10, 2025 13:39

முதலில் இந்திய நாடாளுமன்ற தொடர்களை கூடுதலாக நடத்தவும், அதில் தவறாமல் பிரதமர் இருக்கவும் முயற்சி செய்யவும்.


R.RAMACHANDRAN
ஜூலை 10, 2025 08:37

இவருக்கு விருது மற்றும் விருந்து கொடுத்து நமது நாட்டின் செல்வத்தை கறந்து கொள்கின்றனர். 17 நாடுகளின் பாராளுமன்றத்தில் பேசியதில் நம் நாட்டிற்கு என்ன பயன். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நேரத்தை செலவிடாமல் நாடுகள் பலவற்றிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் இந்தியா வளர்ந்த நாடு என்ற மாயையை உருவாக்க.


Senthoora
ஜூலை 10, 2025 08:56

அழையா விருந்தாளியா போனார். அவங்க தங்கள் பாரம்பரியபடி உபசரிதாங்க.


Arunkumar,Ramnad
ஜூலை 10, 2025 09:07

உன்னைப் போன்ற அறிவாலய கொத்தடிமை மிலேச்சன்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்பது தமிழகம் அறிந்த உண்மை..


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 10, 2025 08:26

அந்த 17 நாடுகளில் எந்த எந்த நாடு சமீபத்திய பாகிஸ்தானுடனான சமீப சிறிய போரில் நம் நாட்டுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தது என்று சொல்ல முடியுமா? அந்த 17 நாடுகளில் எத்தனை நாடுகள் ஐ நா சபையின் பாதுகாப்பு கௌன்சிலில் இடம்பெற்ற நாடுகள் என்று சொல்லமுடியுமா? அந்த 17 நாடுகளில் எத்தனை நாடுகளின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் அதிகமானது என்று சொல்லமுடியுமா ??


vivek
ஜூலை 10, 2025 09:04

பசங்கலுக்கு சொன்னா புரியுமா


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 10, 2025 09:11

இந்தியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எதிர்ப்பு தெரிக்காமல் இருந்தது உன்னைப் போன்ற அறிவிலிகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. வந்துட்டானுக காலங்காத்தால நானும் கருத்துப்...போட்றேனுட்டு...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 10, 2025 09:36

பாரளுமன்றத்தில் பேசுவதை அவளவு பெரிய கௌரவமாக ஒரு தனிநபர் எடுத்துக்கொள்ளும்போது .... அதனால் நாட்டுக்கு என்ன நன்மை என்று பார்ப்பது நாட்டு மக்களின் உரிமை ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை