உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று (அக் 08) கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலை., துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று (அக்., 09) மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 09, 2025 11:42

பிரிட்டன் பிரதமர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சமீபகாலமாக அங்குள்ள இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அது சரியல்ல. அதுபோன்ற நிகழ்வுகள் ஏட்படாமல், இந்திய மக்களை பாதுகாக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா பிரிட்டன் ஒற்றுமை ஓங்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை