சிறுமி பலாத்காரம் பிளம்பருக்கு வலை
புதுடில்லி:தெற்கு டில்லியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிளம்பரை போலீசார் தேடுகின்றனர்.சங்கம் விஹாரில் வசிப்பவர் முகேஷ். அதே பகுதியில் பிளம்பர் வேலை செய்கிறார். கடந்த 22ம் தேதி இரவு ஒரு வீட்டுக்குள் புகுந்த முகேஷ், வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், முகேஷை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.