உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2.7 கோடி தராததால் பீஹார் தேர்தலில் எம்எல்ஏ சீட் தரவில்லை: லாலு வீடு முன் சட்டையை கிழித்து கதறியழுத பிரமுகர்

ரூ.2.7 கோடி தராததால் பீஹார் தேர்தலில் எம்எல்ஏ சீட் தரவில்லை: லாலு வீடு முன் சட்டையை கிழித்து கதறியழுத பிரமுகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: எம்எல்ஏ சீட்டுக்கு ரூ.2.7 கோடி கேட்டனர். அந்த பணத்தை தராததால் எனக்கு சீட் தரவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய பிரமுகர் லாலு வீடு முன்பு கதறி அழுதார். பீ'ஹார் சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் களைகட்டி உள்ளன. அதே நேரத்தில் எம்எல்ஏ சீட் கிடைக்காத பலரும் தத்தம் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l8tsyjlg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் லாலு கட்சியில் திடீர் புகைச்சலாக எம்எல்ஏ சீட் வேண்டும் என்றால் ரூ.2.7 கோடி கேட்டனர். அதை தராததால் வேறு ஒருவருக்கு எம்எல்ஏ சீட் தரப்பட்டதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் மதன் ஷா என்பவர், லாலு பிரசாத் வீட்டின் முன்பு திரண்டு சட்டையை கிழித்து அதிருப்தி வெளிப்படுத்தினார்.பின்னர் தரையில் விழுந்து அழுது அரற்றினார். அங்கு அழுதபடியே பேசிய அவர், தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் நான் சீட் கேட்டேன். உங்களுக்கு சீட் தருவோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சீட்டுக்காக ரூ.2.7 கோடி தர வேண்டும் என்றனர். இந்த பணத்தை கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் யாதவ் (தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தள ராஜ்யசபா எம்பியாக உள்ளார்) கேட்டார். நான் பணம் தர மறுத்தேன். இப்போது அந்த தொகுதியை வேறு ஒருவருக்கு கொடுத்து இருக்கின்றனர்.கட்சிக்காக 1990ம் ஆண்டில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறேன். என் நிலத்தை கூட விற்றிருக்கிறேன். இப்போது எம்எல்ஏ சீட்டை பணத்திற்காக விற்றுள்ளனர். என்னை போன்ற கடும் உழைப்பாளிகளை கட்சி ஒதுக்கிவிட்டு, வசதியானவர்களை முன்னிறுத்துகின்றனர். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று மதன் ஷா கூறினார்.சீட் கிடைக்காமல் ஏமாற்றியதாக கட்சி தலைமை மீது புகார் கூறி அழுத மதன் ஷாவை, அங்கிருந்த ஆர்ஜேடி தொண்டர்கள் அகற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
அக் 21, 2025 18:42

பீகார் விசிக அமைப்பாளராக மாறி தலைவர பிரச்சாரத்துக்கு கூப்பிட்டு லட்சம் வாக்குகள் வித்யா சத்தில் வெற்றி பெறுங்கள்


MARUTHU PANDIAR
அக் 19, 2025 20:23

இதிலிருந்தே தெரியுது கட்சியின் லட்சணம். இவருக்கு வெட்கமே இல்லை போல. தேர்தலில் எம் எல் ஏ ஆகி இவரெல்லாம் நாட்டுக்கு ரொம்ப தான் கிழிச்சுடப் போறாராக்கும். லாலு எப்படி நாட்டை மற்றும் பீஹாரை குடும்பமாக சீரழித்த யோக்கியன் என்று தெரிகிறது. குடும்பத்தையே காஸாவில் இறக்கி விட வேண்டும்


V Venkatachalam
அக் 19, 2025 18:54

ஒரு ஆறுதலான விஷயம். இவரு பணத்தை குடுக்கலே. அதுனால சீட் தரலை. பரவாயில்லை. சுயேச்சையாக நிக்கலாமே. அதுவும் பரவாயில்லை. எங்க டமில் நாட்டில கட்சி நிதின்னு கணிசமா கறந்திடுவானுங்க. சீட்டை குடும்பத்து ஆளுங்களுக்கு குடுத்திடுவானுங்க.இதுக்கு அது தேவலாமே, பணம் மிச்சமாச்சே.


Srinivasan Narasimhan
அக் 19, 2025 17:41

தமிழ் நாட்டுக்கு வாங்க சகோ


அப்பாவி
அக் 19, 2025 16:56

பா.ஜ வில் சேர்ந்து கேட்டுப் பாருங். ஃப்ரீயா சீட் குடுப்பாங்க.


duruvasar
அக் 19, 2025 17:48

திமுகவுடன் கூட்டணி வைக்கலாமே சீட்டுடன் நோட்டும் கிடைக்குமே


தத்வமசி
அக் 19, 2025 16:25

இவரு மக்களுக்கு சேவையா செய்ய வராரு ? கொளையடிக்க வராரு.


duruvasar
அக் 19, 2025 16:02

சீட்டு கொடுத்தாலும் இதுதான் என் கடைசி தேர்தல் என மேடையில் ஒப்பாரி வைக்கும் ஆட்களும் நாம ஊரில் இருக்கிறார்கள். மக்கள் சேவை ஆர்வம் தமிழ்நாட்டில் எக்கச்சக்கம்


Balakumar V
அக் 19, 2025 15:30

27 கோடி கொள்ளையடிக்கும் திட்டமா.


saravanan
அக் 19, 2025 14:44

எம்எல்ஏ சீட் தராததால் அழுது புலம்பி அரற்றிய பிரமுகரை கட்சிகாரர்கள் யாருமே தேற்றவில்லை அகற்றிவிட்டனர் அருமை.


RAJ
அக் 19, 2025 14:41

மக்களுக்கு சேவை செய்ய....


சமீபத்திய செய்தி