வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பக்தர்களின் அடிப்படை தேவைகளை கேரள அரசு கவனிக்கவில்லை. வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெரியப்பாதை பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அடிப்படை கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி அதிகம் இல்லாத இடத்தில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தங்கவும். பக்தர்களிடம் இருந்து பணம் பறிக்கிறது. பிற மதத்தவர் பாதுகாப்பு மற்றும் முடிவெடுப்பதில் இருப்பதால், பக்தர்களின் உண்மையான தேவையை அவர்கள் உணரவில்லை.
இந்த வருடம் போலீசே பத்து பத்து பேராகக் குழு அமைத்து தலைக்கு ரூபாய் 4000/- வாங்கிக்கொண்டு பம்பையிலிருந்து பதினெட்டாம் படி தேங்காய் உடைக்கும் வரை எக்ஸ்க்கார்ட்டாக நூதனமுறையில் வசூலித்த தொகையும் டோலில்காக்க ரூபாய் 3200/- வசூலிக்க வேண்டிய கட்டணத்துக்கு பதிலாக ரூபாய் 10000 முதல் ரூபாய் 12000/- வசூலித்த தொகையும் அரசுக்கோ தேவசம் போர்டுக்கோ போக வாய்ப்புகள் இல்லை என நினைக்கிறேன்.
அடர்ந்த காட்டுக்குள் இத்தனை பக்தர்கள்? இயற்கை சுற்றுசூழல் என்னாகும் ?. லட்சம் மரங்களை வெட்டி விமான நிலையம்? பதிலாக அவரவர் வீட்டுக்கருகிலுள்ள ஆலயங்களை சீர் செய்து வழிபடலாம். அவையும் சக்திவாய்ந்த ஆலயங்கள்தான்.
இந்த ஆண்டு மிகவும் அதிகஅளவில் வந்த பக்தர்களினால் கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு களுக்கு செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும்
இது என்ன பெருமை? நாங்க 2 நாட்கள் டாஸ்மாக்ல ஈடு கட்டுவோம்ல
அதென்ன, உங்கள் மாநிலத்தில் மட்டும் தான் மது விற்கிறீர்களா? வேற எந்த மாநிலத்திலும் மது விற்பனை இல்லையா? உங்க ஊரில் டாஸ்மாக் னா, கேரளா வில் Bevco பெவ்கோ. ஏன் எதுக்கெடுத்தாலும் டாஸ்மாக், டாஸ்மாக் னே யோசிக்கறீங்க???
வருமானத்தில் அங்கு வரும் பக்தர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன். குறைந்தபட்சம் தங்க இடம், வயிற்றுக்கு உணவு. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.