உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய வசதி; தரிசன வழி மாற்றம்

சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய வசதி; தரிசன வழி மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்ச் 14ம் தேதி பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அதன் பின்னர் 15ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது; பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடிமரத்தில் இருந்து நேராக கோவிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்யலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனி மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்ய ஆகும் நேரம் மிச்சப்படும். தற்போதைய சூழலில் 80 சதவீதம் பக்தர்களுக்கு முழு தரிசனம் கிடைக்காமல் இருந்தது. எதிர்காலத்தில் அப்படி இருக்காது. இந்த நடைமுறை மூலம் ஒவ்வொரு பக்தரும் 20 விநாடிகள் முதல் 25 விநாடிகள் வரை தரிசனம் செய்யமுடியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 70வது ஆண்டையொட்டி, ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏப்.1ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MAGESH R
மார் 13, 2025 12:48

ஒவ்வொரு முறையும் இதுபோன்று பொய் செய்தி பரப்பு வார்கள் மக்கள் போனதும் எல்லோருக்கும் ஒன்றுதான் என்பார்கள் ப்ராடு செய்தி


Venkatesan Krishnan
மார் 12, 2025 10:38

Swamiye Saranam, since my last visiti to Sabaimalai was 2011 I dont know the present position. But I definitely say that more improvements are needed especially with darshan please


RR Donn Lee
மார் 12, 2025 03:50

swami Saranam, Need More Facility. Especially Transportation.


vigneshwaran
மார் 11, 2025 15:19

இப்போவே பக்தர்கள் சரங்குத்தி வரை வரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மண்டல மகர விளக்கு காலத்தில் இது சாத்தியம் இல்லாத ஒன்று. திருப்பதி போன்று அணைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்தால் அது பக்தர்களுக்கு பாரமாக இருக்காது. மலை ஏறும் பக்தர்களுக்கு உணவு மற்றும் கழிப்பறை வசதிகளை அவர்கள் வரிசையில் காத்திருக்கும் இடத்திலேயே செய்து கொடுத்து விட்டு பின் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்


M. PALANIAPPAN, KERALA
மார் 11, 2025 09:55

நடைமுறையில் எப்படி வருகின்றது என்று கவனிக்க வேண்டும் 20 முதல் 25 வினாடிகள் வரை ஸ்வாமி தரிசனம் சாதாரண மாதங்களில் சாத்தியம் ஆகும், ஆனால் சீசன் சமயங்களில் நல்ல கூட்டத்தில் இது எவ்வளவு தூரம் நடை முறையில் வெற்றி பெறும் என்று தெரியவில்லை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் நீங்கவில்லை என்றால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் படி ஏறுவது லேட் ஆகும்


புதிய வீடியோ