உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும்; செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்

கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும்; செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்

புதுடில்லி: தனக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்தது.அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - 15ல், போக்குவரத்து துறையில் பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியில் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=djno274i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கின், தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி, சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (அக் 06) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சூரிய காந்த், ''ஏன் நீதிபதி ஒகா ஓய்வு பெற்ற பிறகு இப்படி ஒரு விண்ணப்பதை தாக்கல் செய்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு, மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ''நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு இப்படி விண்ணப்பம் தாக்கல் செய்வது ஏற்கும் படியாக இல்லை'', என்றார். பின்னர் நீதிபதி சூரிய காந்த், ''இது நீதிமன்றத்தின் மனதில் இருக்கும் கருத்து, இது சரி, தவறு என்று நீங்கள் கூற முடியாது'', என்றார்.

கபில் சிபில் வாதம்

இதற்கு பதில் அளித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில், ''அது நீதிமன்றத்தின் மனதில் இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இல்லை, என்றார். இதற்கு நீதிபதி சூரிய காந்த், ''நீங்கள் அமைச்சர் ஆவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் நீங்கள் அமைச்சர் ஆன அன்று சாட்சியை கலைக்கூடிய, அந்த நாளில் நாங்கள் ஜாமின் உத்தரவை திரும்ப பெறுவோம். நாங்கள் பிறப்பித்த உத்தரவை துண்டு துண்டாக மாற்ற முடியாது, என்றார்இதற்கு கபில் சிபில், ''செந்தில் பாலாஜி மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போதே அவர், அமைச்சர் ஆவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது, என்றார்.இதற்கு நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, ''நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, நீங்கள் அமைச்சர் ஆவதற்கு எதிரான தடை உத்தரவு என்று நாங்கள் கருதவில்லை. அவர் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது'', என்றார். பின்னர், நீதிபதி சூரிய காந்த், ''உங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது'' என்றார்.

கபில் சிபில் வாதம்

இதற்கு கபில் சிபில், ''செந்தில் பாலாஜி நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார். விசாரணை இன்னும் தொடங்க வில்லை. சாட்சிகளை தொடர்பு கொண்டார் என்று எந்த புகாரும் இல்லை. விசாரணையை பாதிக்கும் வகையில் ஏதாவது தவறு செய்தார் என்று தெரியவந்தால் உத்தரவை திரும்ப பெறலாம்'', என்றார். இதற்கு, நீதிபதி சூரியகாந்த், ''நீங்கள் அமைச்சர் ஆனதற்கு நீதிமன்றம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது. நீங்கள் மீண்டும் அமைச்சராக விரும்பினால் அனுமதி கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம், என்றார். இதற்கு கபில் சிபில், ''எத்தனையோ அமைச்சர்கள் மீது வழக்குகள் நடக்கின்றன, எத்தனை பேர் ராஜினாமா செய்தார்கள், ஏன் அவர்கள் ராஜினாமா செய்ய வே ண்டும். அவர் அமை ச்சராக இருப்பதை பற்றி ஏன் மத்திய அரசு கவலைப்படுகிறது, என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஏன் டில்லிக்கு மாற்றக்கூடாது?

மற்றொரு திருப்பமாக, செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கை ஏன் டில்லிக்கு மாற்ற கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், ''சாட்சிகள் அனைவரும் தமிழகத்தில் இருப்பதால் அது சாத்தியமில்லை'' என்று தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ''இன்று நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் மாநில அரசுகளுக்கு எதிராக வராமல் இருப்பதற்காகவே இத்தகைய ஆலோசனைகளை தெரிவிக்கிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

rasaa
அக் 07, 2025 10:12

தெய்வம் நின்று கொல்லும்.


Varadarajan Nagarajan
அக் 06, 2025 20:59

11:00 மணிக்கு திமுக வெற்றிபெற்றது என்ற அறிவிப்பு வந்தவுடன் 11:05 மணிக்கு ஆற்றில் மணல் அல்ல நீங்கள் வண்டிகளுடன் செல்லலாம். அப்படி உங்களை யாரும் தடுத்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என யார் கூறினார்கள்? இது பகிரங்கமான ஆற்றுமணல் கொள்ளை இல்லையா? அதை ஊக்குவிக்கும் செயல் இல்லையா? பார்க்கப்போனால் ஆளும்கட்சியே இதற்க்கு வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும். நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருக்கலாம்.இப்படிப்பட்டவர்கள் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் கருதுகின்றது


Venkatesan Srinivasan
அக் 06, 2025 20:46

தொடர்ந்து திருடர்களுக்கு ஆஜராகும் வக்கீல்களை அரசாங்கம் முறைப்படுத்தினாலே அதாவது திருட்டு பணம் அவர்களை சென்றடைவதை தடுத்தாலே போதும். திருட்டு சிறிது சிறிதாக ஒழிந்து விடும்.


N S
அக் 06, 2025 20:45

மந்திரியாக அனுமத்தித்தால் திராவிட மாடல் அரசை எங்கோ எடுத்து செல்ல வாய்ப்பிருக்குது. கடுமையான செயலாக இருக்குதே, அப்பா.


M Ramachandran
அக் 06, 2025 20:01

பள்ளு போலாகும் நேரத்திலழும் கபில்லு சிப்பிலு காசுபார்க்க பல தில்லுமுல்லு வக்கீழு நீதிபதி போன்று அவரெ தீர்ப்பு சொல்லுவார் போல் இருக்கும். இவர அமலாக்க துறை நன்ங்கு கவனிக்க வேண்டும். ஜெகஜால் கில்லாடி ட் இந்த மாதிரி தில்லுமுல்லு காசுக்கு கூவும் கடைந்தெடுத்த வழகுறைஞ்சர்கள் இருப்பதால் எதிர் தரப்பினருக்கு கேடு.


R.MURALIKRISHNAN
அக் 06, 2025 19:17

இவரை மீண்டும் உள்ளேயே வைக்கலாம்


Rajan A
அக் 06, 2025 18:47

கபில் சிபில் வாங்கும் ஊதியம், வாங்கிய லஞ்சத்தை விட பல மடங்கு. இதெல்லாம் தேவையா?


rama adhavan
அக் 06, 2025 18:45

வள வள வாதம். அ இப்படி இருந்தால் ஏழைகளுக்கு துரித நீதி கிடைக்க வாய்ப்யே கிடையாது. கேஸ் இன்னும் 100 ஆண்டுகள் இழுக்கும்.


Raghavan
அக் 06, 2025 18:58

வழக்கு ன்னும் ஒரு யுகம் நடந்தாலும் ஆச்சர்யப்படத்தேவை இல்லை. பணம் பாதாளம் வரை பாயும்.


Muthukumaran
அக் 06, 2025 17:38

யுகத்திற்கு நடக்க ஆயிரக்கணக்கில் வழக்கில் சேர்ப்பதை நீதிமன்றம் அனுமதிப்பதே மனுதாரருக்கு சாதகம். எத்தனை மனுக்கள். வாய்தா ராணி என்றார்கள். இவர்கள் மாற்று வழி எந்த வகையில் அதற்கு குறைவானது. மூன்று தலைமுறை அனுபோக பாத்திய 99 வருட அரசு நில குத்தைகைகக்கு ஒப்பான சலுகை.


Chandru
அக் 06, 2025 17:33

The centre can explore the feasibility of an encounter with respect to persons like kapil sibal and the like in the greater interest of BHARATH


புதிய வீடியோ