உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து காந்தியின் பெயரை நீக்குவதா? லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து காந்தியின் பெயரை நீக்குவதா? லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என மாற்றுவதை ஏற்க முடியாது.'தேசத் தந்தை காந்தியின் பெயரை நீக்கும் நடவடிக்கை, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது' என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கியதால், லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஆவேசம்

பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் முடிவடைய, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என, மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025 மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆவேசமாக பேசினர்.காங்., - எம்.பி., பிரியங்கா: தனிநபரின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக உள்ளது இந்த மசோதா. பலவீனமான மாநிலங்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.,யால் பாதிக்கும் போது, இனி, அது அதிகமாகும். நாட்கள் தான் அதிகரிக்கப்படுகிறதே தவிர, சம்பளம் உயர்த்தப்படவில்லை.கூட்டாட்சி இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே நிதி தர மறுக்கிறது. அப்படியிருக்கையில் இத்திட்டத்தின் பெயரை மாற்றுவது ஏன்? காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. அனைவரது குடும்பத்திற்கும் சொந்தமானவர். எனவே, பெயரை நீக்காமல் விரிவாக விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்த அடிப்டையில் எதையும் செய்யக்கூடாது.காங்., - எம்.பி., சசி தரூர்: இது மிகவும் துரதிஷ்ருடவசமானது. காந்தியின் பெயரை நீக்குவது தவறு. அவரது ராம ராஜ்யம் என்பது அரசியலாக மாறக்கூடாது. வரலாற்று ரீதியிலான அநியாயம் இது. விதிமுறைகளுக்கும் எதிரானது. இம்மசோதா, கூட்டாட்சி முறைக்கு எதிரானது.பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், ''விவாதத்தின் போது சபைக்கே வர மாட்டீர்கள். அதனால் தான் இப்போது, அறிமுகத்தின் போதே பேசிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு எதிர்த்து பேசுகிறீர்கள்,'' என்றார்.

'காந்தி எங்கள் இதயங்களில்'

மசோதாவை அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது: எங்கள் இதயத்தில் இருப்பவர் காந்தி. மறைந்த தலைவர்களான காந்தி, தீன்தயாள் உபாத்யாயா போன்றவர்களுக்கு ஏழை மக்களின் நலன் சார்ந்த கண்ணோட்டம் இருந்தது. 2.13 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஐ.மு., கூட்டணி செலவிட்டது. நாங்கள், 8.53 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டு, இத்திட்டத்தை வலிமைப்படுத்தி உள்ளோம். 125 நாட்கள் வேலை என்பது உறுதி.இது வெறும் பொய் வா க்குறுதி அல்ல. ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் என்று கூட இருந்தது. அதை காங்., மாற்றியது தானே. அது நேருவுக்கு இழுக்கு இல்லையா? காந்தி, எங்கள் மனங்களில் உள்ளார். ராம ராஜ்யம் வேண்டுமென்றார் அவர். அதனால் தான் இந்த மசோதா. ஜி ராம் ஜி என்ற இந்த வாசகம் எதிர்க்கட்சிகளை ஆத்திரப் படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ms Mahadevan Mahadevan
டிச 17, 2025 10:50

எல்லாவற்றிலும் இந்தி திணிப்பு.


Barakat Ali
டிச 17, 2025 11:19

ஹிந்தியை வளர்க்க ஹிந்தி திவஸ் நடத்தியதே காங்கிரஸ்தான் .... அதை வசதியா மறந்துடுறீங்க ......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 10:17

எதிர்க்கட்சிகளின் அமளி, ரகளை, கூச்சல்.... இவற்றைப் பொறுத்துக்கொள்ள மத்திய அரசு.... வாழ்க இந்திய பணநாயகம் ......


சந்திரசேகர்
டிச 17, 2025 09:50

எல்லோரும் நூறு நாள் வேலை என்று தான் அழைக்கிறார்களே தவிர காந்தி நூறு நாள் வேலைத் திட்டம் என்று அழைப்பதில்லை. உரிமை தொகை என்றால் ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு ஒரு மாசம் எல்லா தேவையையும் பூர்த்தி செய்து விட முடியுமா. உரிமை தொகை பதினைந்தாயிரம் கொடுத்தால் தான் அது உரிமை தொகை இல்லையென்றால் அது லஞ்ச தொகை


vbs manian
டிச 17, 2025 09:46

இந்த உறக திட்டத்தில் என்ன நடக்கிறது. லோக்கல் அரசியல் புள்ளிகள் விளையாட்டு. ஆண்கள் சீட்டு விளையாடுகிறார்கள். பெண்கள் கோல போட்டியில் பங்கேற்பு. செய்தி இதழ்களில் வந்தது. தோண்டிய இடத்தையே திரும்ப தோண்டுவர். வெட்டிய மரத்தை திரும்ப வெட்டுவர். நூற்று இருபது ரூபாய்க்கு கையெழுத்து வாங்கி என்பது ரூபாய் பட்டுவாடா. கிராமங்களில் வயல் மற்றும் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.


vbs manian
டிச 17, 2025 08:46

எதிர் கட்சிகளின் காந்தி பக்தி மெய் சிலிர்க்கிறது.


Rajasekar Jayaraman
டிச 17, 2025 08:23

நீக்கினால் என்ன மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது ஒன்று மட்டும் தான் எதிர்க்கட்சிகளின் வேலையா.


ramani
டிச 17, 2025 05:11

காந்தியின் பெயரை நீக்குவதில் தவறில்லை. காந்தியின் பெயரை குடும்ப பெயராக வைத்து கொண்டு மக்களை ஏமாற்றுவது தான் தவறு


Alphonse Mariaa
டிச 17, 2025 00:44

Why cost is now on the state level but gst is taken from the state funds


சிட்டுக்குருவி
டிச 17, 2025 00:43

ஊழல்நடக்கும் திட்டங்களுக்கெல்லாம் காந்தியின் பெயரைவைப்பது பொருந்தாது என்ற எண்ணம்தான் .வேறு என்ன இருக்கமுடியும் .