உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்

வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'பல ஆண்டுகளாக தங்கி இருந்தாலும், வாடகை சொத்து மீது வாடகைதாரர்கள் உரிமை கொண்டாட முடியாது' என, மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. டில்லியை சேர்ந்த ஜோதி சர்மா என்பவரின் மாமனார் ராம்ஜி தாஸ், தனக்கு சொந்தமான கடையை, 1953ல் வாடகைக்கு விட்டார். அவர் மறைந்த பின், அந்த சொத்து மருமகள் ஜோதி சர்மா பெயருக்கு மாறியது. இதையடுத்து, இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்கும் தொழிலை விரிவுப்படுத்த கடையை காலி செய்யும்படி வாடகைதாரரை ஜோதி கேட்டுள்ளார். இதற்கு வாடகைதாரர் விஷ்ணு கோயல் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராம்ஜி தாஸ் மருமகள் பெயரில் எழுதிய உயில் போலியானது என குற்றஞ்சாட்டினார். தவிர, 30 ஆண்டுகளாக அந்த கடையை நடத்தி வருவதாகவும், 1980ல் வாடகை தருவதை நிறுத்திய பிறகும், நில உரிமையாளர் தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அனுபவத்தில் அந்த சொத்து உரிமை தனக்கே சேரும் எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம். அந்த சட்டத்தின் அடிப்படையில், டில்லி உயர் நீதிமன்றம் விஷ்ணு கோயலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.இதனால் மனம் உடைந்த ஜோதி சர்மா, உச்ச நீதிமன்றத்தை நாடினார். இருதரப்பு வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வு அளித்த தீர்ப்பின் விபரம்:வாடகை என்பது நில உரிமையாளரின் அனுமதியின் பேரில் விடப்படுவது. நில உரிமையாளரின் ஒப்பதலுடன் தான் வாடகைதாரர் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். அதனால், அதை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்த முடியாது. மேலும், ஆண்டு கணக்கில் வாடகை இடத்தில் வசிப்பதால் மட்டும், வாடகைதாரர் அந்த சொத்தின் உரிமையாளராக மாறிவிட முடியாது. இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றங்கள் எடுத்த முடிவுகள் தவறானவை. ஆதாரங்களுடன் ஒத்துப் போகவில்லை. 1953ல் ராம்ஜி தாசுடன் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, வாடகைதாரர்கள், தொடர்ந்து அவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் வாடகை செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம், உரிமையாளர் - வாடகைதாரர் என்ற உறவு இருந்தது உறுதியாகியுள்ளது. வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டாலே, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் உரிமைகளுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவோ, எதிர்க்கவோ முடியாது. அந்த வகையில், சம்பந்தப்பட்ட உயில் உண்மையானது தானா என சந்தேகம் எழுப்புவதற்கான முகாந்திரம் வாடகைதாரருக்கு கிடையாது. நீண்ட காலமாக வாடகை செலுத்தி வந்ததை கருத்தில் கொண்டு, வாடகைதாரர், கடையை காலி செய்ய ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படுகிறது. அதற்குள், நிலுவையில் உள்ள வாடகை பணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சிந்தனை
நவ 13, 2025 21:18

கிறுக்குத்தனமான சட்டம் இதுவரை எத்தனை குடும்பங்களை நாசம் செய்ததோ தெரியவில்லை


அப்பாவி
நவ 13, 2025 18:26

காலி பண்ணத் தேவையில்லை. வாழ்வாதாரம் போயிரும்னு சொல்லிட்டு திரியறாங்க.


Kalyanaraman
நவ 13, 2025 11:10

1963 சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம். - ஆக இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு இடத்தை ஆக்கிரமிப்பது குற்றமல்ல. எப்படி இவ்வளவு கேவலமான சட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். பல சட்டங்கள் குற்றவாளிகளை உருவாக்குவதற்கும் பெருக்குவதற்கும்தான் இருக்கிறது.


Sun
நவ 13, 2025 12:29

நம் நாட்டை ஆக்கிரமிக்க வந்த கஜினி முகம்மதுவை என்னவோ பெரிய ஹீரோ போல நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நம் நாட்டில் ஆக்கிரமிப்பாளர்களும், ஆக்கிரமிப்பும்தான் இங்கு கொண்டாடப் படுவார்கள், கொண்டாடப் படும்.


சந்திரசேகர்
நவ 13, 2025 10:07

அப்போ புறபோக்கு இடத்தை பனிரெண்டு வருடங்கள் ஆக்கிரமித்தால் அது ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு சொந்தமா. ஓகோ அதான் விஷயமா நம்ம கட்சிக்காரர்கள் ரகசியம்


Shekar
நவ 13, 2025 09:57

1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம்... என்ன சட்டம்.


Pandi Muni
நவ 13, 2025 09:31

வாடகைக்கு குடியிருந்தவனுக்கு வீடு சொந்தம், கடை வாடகையில் வந்தவனுக்கு கடை சொந்தம், இந்து அறநிலயதுறைக்கு கோயில் சொந்தம், கள்ள குடியேறிகளுக்கு வாக்குரிமை சொந்தம் சிறுபான்மையினனுக்கு நாடே சொந்தமா? என்னங்கடா உங்க இத்துப்போன சட்டம்?


Ajrjunan
நவ 13, 2025 09:17

உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் எப்படி சாமானியர்களால் உயர்நீதி மன்றம் வரை சென்று வழக்கு நடத்த முடியும். தவறான தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதிக்கு அபராதம் விரித்து அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.


duruvasar
நவ 13, 2025 08:13

ஒப்பந்தமும் கிடையாது, வாடகையும் கிடையாது , ஆனால் ஆக்ரமித்துள்ள கோயில் நிலங்களின் கதி என்ன? கேட்டால் அந்த கோவில் கடவுளை வழக்கு தொடுக்க சொல்லுங்கள் என சொல்லுவார்கள் போலும்.


Indhiyan
நவ 13, 2025 06:55

நல்ல தீர்ப்புதான். ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை. பல வருடங்கள் வாடகை செலுத்துபவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் வாடகையே இல்லாமல் ஆக்ரமித்து இருந்தால் ஆக்கிரமித்தவருக்கு சொந்தம். எப்படி?


Rangarajan Cv
நவ 13, 2025 06:45

Landmark decision by SC. Huge sigh of relief for owners. This decision will be treated as law going forward


சமீபத்திய செய்தி