உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்

ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: டில்லி அருகே, 'ஆட்டிசம்' பாதித்த சிறுவனை சரமாரியாக அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டா, உ.பி.,யின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இங்கு, செக்டார் 55 பகுதியில் இருக்கும் சர்வதேச பள்ளி ஒன்றில், வருண் கோயல் என்பவரின் 10 வயது மகன் படிக்கிறான். 'ஆட்டிசம்' எனப்படும், கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனைப் போன்ற மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் இந்த தனியார் பள்ளியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26ம் தேதி, அந்த சிறுவனை, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவன் என்றும் பார்க்காமல், சிறப்பு பயிற்சியாளரான ஆசிரியர், சரமாரியாக அடித்தார்.இது தொடர்பான வீடியோ, கடந்த 28ம் தேதியன்று வெளியானது. பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸாப் குரூப்பில் யாரோ ஒருவர் பகிர்ந்துள்ளார்.சமூக வலை தளங்களிலும் இந்த வீடியோ நேற்று முன்தினம் வேகமாக பரவியதையடுத்து, சிறப்பு பயிற்சியாளர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது சிறுவனின் தந்தை வருண்கோயல் போலீசில் புகார் அளித்தார். பள்ளி ஆசிரியரும், சிறப்பு ஆசிரியருமான அனில் குமார், சிறுவனை அடித்ததாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ஆசிரியர், தனியார் பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், சிறுவர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரியர் அனில் குமாரை கைது செய்ததோடு, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், உ.பி., மாநில தொடக்கக் கல்வித் துறை சார்பாக, கவுதம புத்தா நகர் மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் விசாரணை நடத்தினார். அப்போது, முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி இயங்கியது தெரிந்ததால், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

visu
மார் 31, 2025 08:45

சர்வதேச பள்ளி அனுமதி இல்லாதது அதில் மாணவர் சேர்க்கை .மாட்டிக்கொண்டால் மட்டும் அதெப்படி அனுமதியற்றது என்று தெரிய வருது அரசு அதிகாரிகளை காப்பாற்றவா


अप्पावी
மார் 31, 2025 08:09

ஆட்டிசம்.பாதித்தவர்கள் எப்போது எப்பிடி நடந்து கொள்வார்கள் என்று கணிக்க முடியாது. பெற்றவர்களை கண்ட படி தாக்கும் ஆட்டிசம் குழந்தைகளைப் பார்த்திருக்குறேன். அந்த மாணவன் ஆசிரியரைத் தாக்கியிருப்பான். இல்கை சக மாணவர்களைத் தாக்கியிருப்பான். அவனை முதலில் வுட்டுற்கு அனுபுங்கள். அவனால் சக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டேஞ்சர்தான். சும்மா பிட்டு அடிப்பது ஆசிரியரின் வேலை அல்ல. அவர்களும் நல்ல டிரெய்னிங் எடுத்துதான் வந்திருப்பார்கள்.


Kasimani Baskaran
மார் 31, 2025 08:08

தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் மாணவர்களை முதலிலேயே கண்டறிவது எளிதல்ல. அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு திறமையுள்ள ஆசிரியர்கள் கிடைப்பது எளிதல்ல. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் ஏராளமாக சம்பளம் கேட்பார்கள். இது போன்ற தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு அதிஷ்டம் இருந்தால் வெகுவாக குணமடைந்து சாதாரண பிள்ளைகள் போல வர அதிக வாய்ப்பு இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் பில் கேட்ஸ் கூட ஆட்டிசம் குறையில் வளர்ந்தவர்தான்...


GSR
மார் 31, 2025 08:07

இத்துறையில் உள்ள பலரிடம் பேசி இருக்கிறேன். ஒரு செயலை ஒரு குழந்தை செய்ய வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை சமூக மனோதத்துவ வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தெரபிஸ்ட் என கூறி கொள்கின்றனர். மனோதத்துவ நிபுணர் தேவை இல்லை என்று தாங்களே அரைகுறை மனோதத்துவ முறைகளை கையாளும் போலி தனம் வேறு. விளைவு பல குழந்தைகள் தங்கள் வாழ்நாட்களை விரயம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களையும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் செய்ய அவசியம் இல்லை. நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொண்டு தான் தெரபி தருகிறேன். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்


Ganesun Iyer
மார் 31, 2025 07:38

மாட்டினலாத சீல்.. அந்த டிவிசன் அதிகாரியையும் கைது செய்ய வேண்டும்.. முதல் மந்திரி இந்த மாதிரி அதிகாரிகள் வீட்டு மேலும் புல்டோசர் விட்டு முதல் மாதிரியாக திகழலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை