உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்; தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது பற்றி மோகன்லால் நெகிழ்ச்சி

என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்; தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது பற்றி மோகன்லால் நெகிழ்ச்சி

புதுடில்லி: 48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை. மிகச் சிறந்த தருணம் என தாதாசாகேப் பால்கே விருது குறித்து நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.நடிகர் மோகன் லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது வரும் செப்டம்பர் 23ம் தேதி வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் மோகன்லால் கூறியதாவது: என்னுடன் பணியாற்றிய பலர் இப்போது இல்லை. எனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடுவர் குழுவிற்கும் மத்திய அரசுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 48 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை.

தனிப்பட்டது அல்ல

இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. மலையாள சினிமாவுக்கு இந்த விருது வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இது மிகவும் உயர்ந்தது. இது சிறப்பு வாய்ந்தது. நான் இதில் பெருமைப்படுகிறேன்.

மாயாஜாலம்

சினிமாவில் இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தால் பல முன்னேற்றங்களை கண்டுள்ளன. சினிமா என்பது மாயாஜாலம். 48 ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்திருப்பது ஒரு வகையான சர்க்கஸ். நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்ட போது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். இந்தப் பெருமை என்னை உருவாக்கிய மலையாள திரைத்துறைக்கே சேரும்.

சிறந்த தருணம்

மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்த சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு மோகன்லால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Oviya Vijay
செப் 22, 2025 06:58

பாகுபாடு பார்த்து வழங்கப்படும் விருதுகள் ஆளும் அரசுகளுக்குத் தான் அவமானமேயன்றி விருதுகள் பெறாத திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு அல்ல...


Sivaram
செப் 21, 2025 19:02

உண்மையா ஹாசனுக்கு டான்ஸ் ஆட மட்டும் தெரியும்.நடிக்க தெரியாது மோகன்லால் அப்படி கிடையாது இதெல்லாம் டான்ஸ் மற்றும் சண்டை படம் பார்ப்பவர்களுக்கு புரியாது


Sivaram
செப் 21, 2025 18:04

கமல ஹாசன் இவரை பார்த்து கற்று கொள்ள வேண்டும். நடிப்பு என்றால் மோகன்லால் மய்யம் கூஜா தூக்கி இப்படி காலில் விழுந்து விட்டாரே அய்யா


duruvasar
செப் 21, 2025 17:49

ஸ்டாலின் மலையாளத்தில் வஸ்த்த்து சொல்லுவார் . எண்டே பிரியப்பட்ட ஏட்டன் ....... ...


Oviya Vijay
செப் 21, 2025 16:49

மத்திய அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது... அனைத்து இந்திய மொழி நடிகர்களாலும், ஒருவரின் அசாத்திய திறமைக்காகப் போற்றப்படும் ஒரு நடிகர் என்றால் அது நம் தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த கமல்ஹாசன் தான். அதில் எவருக்கும் இங்கே மாற்றுக் கருத்து என்பது இருக்க வாய்ப்பில்லை... ஆனால் அவருக்கு வழங்கப்படும் விருதுகள் யாவும் காலம் தாழ்த்தியே வழங்கப் படுகின்றன... காரணம் எந்நாளும் அவர் தற்போதிருக்கும் மத்திய அரசுடன் இணக்கம் காட்டியதில்லை... ஒருவேளை மத்திய அரசுக்கு அவரும் ஜால்ரா தட்டுபவராக இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு அனைத்து விருதுகளும் அவர் வீட்டின் முன்னே வரிசையில் நின்றிருக்குமோ என்னவோ... தற்போது விருது அறிவிக்கப் பட்டிருக்கும் நடிகர் மோகன்லாலின் திறமையை இங்கே குறைத்து மதிப்பிடுவது என்னுடைய நோக்கமல்ல... ஆனால் இத்தகைய உயரிய விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது அதனை வாங்கும் நடிகர்களுக்கே அது தர்மசங்கடத்தை உண்டு செய்யும்... அவருக்குத் தெரியாதா என்ன... இந்த விருது இன்னமும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படவில்லை என்பது... கமலை விட அவர் திறமை படைத்தவர் என்றால் அவரே ஒப்புக் கொள்ள மாட்டார்... மோகன்லாலின் கலைப்பயணம் ஆரம்பித்தது 1978 ல்... ஆனால் கமல்ஹாசனின் கலைப்பயணம் 1960 ல் தன் ஐந்து வயதிலேயே ஆரம்பித்தாயிற்று... விருதுகள் என்பது மற்ற கலைஞர்களை வேண்டுமானால் பெருமைப் படுத்தலாம். ஆனால் கமலுக்குக் கொடுக்கப்படும் எத்தகைய விருதும் தனக்குத் தானே பெருமை கொள்ளுமேயொழிய உண்மையில் அதில் கமலுக்குப் பெருமையல்ல... பத்மபூஷன் விருது ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட பின்னரே கமலுக்குக் கொடுக்கப்பட்டது... அதே போல் பத்மவிபூஷன் விருதும் அவ்வாறே ரஜினிக்குத் தான் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கமலுக்குக் கொடுக்கப்படவில்லை... இங்கே திறமைக்கு மரியாதை இல்லாமல் அரசியல் செல்வாக்கினால் விருதுகள் வழங்கப்படும் போக்கு நீடிக்குமானால் அது கலைஞர்களுக்கு ஆளும் அரசுகள் செய்யும் துரோகம் என்றே கூறவேண்டும்... நம் தமிழகத்தின் பொக்கிஷம் நாகேஷ் என்னும் மாபெரும் நடிகர் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது கூட பெறவில்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது... அதே போல் பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே என்னும் விருது நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட பின்பே மத்திய அரசால் இந்திய நாட்டின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது... பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது நம் நடிகர் திலகம் தான்... அவ்வாறு இன்னொரு நாடு நம் நாட்டின் கலைஞனின் திறமையை அங்கீகரிக்கும் போது நம்மை ஆளும் அரசுகளின் கண்களுக்கு அது புலப்படாமல் போவது வெட்கக்கேடு... இந்த சூழ்நிலையில் பாராட்டத்தக்க ஒருவர் என்றால் அது பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள். அவருக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை வாங்க மறுத்து அதற்கான காரணமாக, இது காலம்தாழ்த்தி வழங்கப்படும் மிகச்சிறிய விருது என்றும் அதனைப் பெற தனக்கு விருப்பமில்லை என்றும் தன் சேவைக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னாவே உரியது என்றும் மத்தியில் ஆளும் அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருந்தார்... பாகுபாடு பார்த்து வழங்கப்படும் விருதுகள் ஆளும் அரசுகளுக்குத் தான் அவமானமேயன்றி விருதுகள் பெறாத திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு அல்ல... விருதுகள் கொடுப்பதில் யார் புறக்கணித்தாலும் உலகளவில் பெருமை சேர்க்கும் கமல்ஹாசன் என்னும் ஒரு மாபெரும் கலைஞன், ஒரு தமிழன் என்பதில் எந்நாளும் நமக்குள் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது...


புதிய வீடியோ