உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!

உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sot79mpc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: 17ம் தேதி பொதுக்குழு அறிவித்து இருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாமக பெயரில் பொதுக்குழு கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டங்களுக்கும், கட்சி விதிகளுக்கும் புறம்பானது. உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்.இது சம்பந்தமாக விழுப்புரம் காவல்துறையிடம் புகார் கொடுத்தேன். அதேபோல் சைபர் கிரைம், அந்த துறையிடமும் புகார் கொடுத்து இருக்கிறேன். அந்த ஒட்டு கேட்கும் கருவி எல்லாவற்றையும் காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். ஒரு பக்கம் சைபர் கிரைம், காவல்துறை விசாரிக்கிறது. மறுபக்கம் நானே ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி, அவர்கள் இது எங்கே இருந்து இயக்கப்படுகிறது என்று ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். இது பிரைவேட் ஏஜென்சி என்பது போலீசாருக்கும், சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் வேறு ஒன்றும் கிடையாது. கட்சியின் நிறுவனர், தலைவர் நான் தான். என்னை கட்சியினர் சந்திக்க கூடாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறினார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

panneer selvam
ஆக 03, 2025 18:26

Ramdass ji , We need much more sensational accusations and glamorous crime ges against your son , then only for common men will have more interest to read your daily reports . Go head with mud slinging , we need to have some interesting morning show .


நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2025 21:46

நம்ப முடியவில்லை தலைவரே


Ramesh Sargam
ஆக 02, 2025 21:10

அப்பா, மகன் இருவரும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளனர். இவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் - ஒருவேளை ஆட்சியில் அமர்ந்தால்


Gopal Kadni
ஆக 02, 2025 19:54

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பாமகவை மக்கள் மறக்கக்கூடாது என்பதற்காக அருமையான நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல வேடிக்கை. வடிவேலு தோத்துட்டாருங்க.


sridhar
ஆக 02, 2025 19:17

இல்லை, ஷாஹ் ஜஹானை அவர் மகன் aurangazep வேவு பார்த்தான்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 02, 2025 19:15

என்னதான் இருந்தாலும் கொள்ளி போட மகன் வேண்டும். அதனை மனதில் வைத்தாவது மகனுக்கு உரிய மரியாதை கொடுத்து கடைசி காலத்தில் விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மை வேண்டும். எல்லாம் நடமாடிக் கொண்டு இருக்கும் வரை தான். போகும் போது இந்த கட்சியை கூடவே எடுத்து கொண்டு போக முடியாது. குழந்தைகள் நல்ல படியாக வாழ வேண்டும் அவர்கள் மகிழ்ச்சியாக அவர்கள் காலம் வரை நன்றாக நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாய் தந்தையரும் நினைத்து பிராத்தனை செய்ய வேண்டும். குடும்ப சண்டைகள் தெருவுக்கு கொண்டு வரக்கூடாது. அப்படி வந்தால் அது தான் உங்கள் பலவீனம். அதை வைத்து கூட இருந்தே குழி பறிக்கும் கும்பல்கள் பலன் பெறும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கூட பிறந்த சகோதர சகோதரிகள் குறிப்பாக சகோதரர்கள் தங்கள் சகோதரர்களுக்காக விட்டு கொடுத்து சென்றால் குடும்பமும் உறவும் இரேழு இருபத்தி ஒரு தலைமுறைக்கும் நன்றாக வாழும்.


SRIRAM
ஆக 02, 2025 19:09

மருத்துவர் அய்யா அவர்கள் காலத்திற்கு பிறகு பாமக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார் போலும்...... தான் நிறுவிய கட்சி தன்னாலே அழிய வேண்டும் என்று நினைக்கிறார்.....


Anantharaman Srinivasan
ஆக 02, 2025 18:44

தந்தை தனக்குத்தானே வேவு பார்க்கும் கருவியை வைத்து விட்டு என் மீது பழி சுமத்துகிறார் என்பது அன்புமணியின் வாதம். சாகும்வரை நான்தான் தலைவன் என்று பதவி வெறி பிடித்து அலைவது வெட்கக்கேடு.


M Ramachandran
ஆக 02, 2025 17:46

தந்தை உத்தமரா அவர் கடந்து வந்த பாதையை உற்று நோக்கினால் தெரியும். குடும்ப பாசம். அதுவும் இப்போ வேறு மாதிரியான பாசம்கா மாறி தன சுகதிற்கே முன்னுரிமை என்று ஆகி போச்சி. எவ்வளவு சொத்து ஆட்டை போட்டது ஆரம்ப காலத்தில் தனக்கு பணம் பண்ண உதவியாக இருந்து காடு வெட்டியை எதற்கு வெறுத்தீர்கள்? அவர் குடும்பம் இந்து எந்த நிலைக்கு உள்ளது. நீஙகள் ஏமாற்று வித்தையில் கைய்ய தேர்ந்தவர். போன தேர்தலில் ஸ்ரீ பெருப்புத்தூர் தொகு தி ஒரு பெண்மனியை நிறுத்தி அவர் தேர்தலி வெற்றி பெறாதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். திருட்டு கட்சியின் மூலம் எவ்வளவு கை மாறியது என்பது தெரியும். உத்தமர் போல் டிராமா போடாதீங்க


Kjp
ஆக 02, 2025 17:21

மகன் மேல் பழி சுமத்துவதற்காக நீங்களே ஏன் ஒட்டு கேட்கும் மெஷினை வைத்துவிட்டு மகன் மேல் புகார் கொடுப்பது போல் இருக்கிறது என்று மற்றவர் நினைக்க மாட்டார்களா? உங்கள் பதிவுகளை பார்க்கும்போது மகன் மேல் இவ்வளவு வன்மம் இருக்கிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். வயதான அளவுக்கு அனுபவம் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லையே.


புதிய வீடியோ