உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா ஒத்திவைப்பு

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை மாலை 4 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r2sa2zvo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா கூடியது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை எச்சரித்தும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால், லோக்சபாவை மாலை 4 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா

அதேநேரத்தில், ராஜ்யசபா காலை 11 மணி தொடங்கி நடந்து வருகிறது. அவையை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் நடத்தி வருகிறார். அவை தொடங்கியதும் சிறிது நேரம் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா சபை முன்னவர் நட்டா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அலகாபாத் உயர்நீதிமற்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆபரேஷன் சிந்துார் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மழைக்கால கூட்டத்தொடரின், முதல் நாளிலேயே இன்று புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

K.n. Dhasarathan
ஜூலை 21, 2025 16:55

பாராளுமன்ற கூட்டம் நடக்கையில் நம் ஊர் சுற்றி பிரதமர் எங்கே ? அவருக்கு வருடம் முழுதும் ஊர், உலகம் சுத்த வேண்டும், எவன் பாராளுமன்றம் வந்தால் என்ன, வராவிட்டால் எனா, எதைப்பற்றியும் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன ? நாட்டு நலனாவது மண்ணாங்கட்டி யாவது, எப்படியோ குப்புற விழுந்து ஆட்சி அமைத்தாயிற்று, பிறகு என்ன, அடுத்தே தேர்தல் வரை நன்றாக அனுபவி ராஜா அனுபவி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 21, 2025 14:27

இந்த எதிர் கட்சிகள் பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் இப்படி பாராளுமன்றத்தில் ரகளை செய்து வெளி நடப்பு செய்யும். தாக்கல் செய்யப்பட்ட எந்த மசோதா மீதும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தாது. பின்னர் அந்த மசோதா சட்டமானவுடன் அமெரிக்கா சைனா காரன் அறிவுரை படி பத்திரிகையாளர் மத்தியில் சொல்லி கொடுத்ததை ஒப்பிப்பார்கள்.


naranam
ஜூலை 21, 2025 14:17

இதற்க்காகத் தானே டிரம்ப்பும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் இந்த சமயத்தில் வாயைத் திறந்தாங்க? இல்லையென்றால் இந்தக் கோமாளி ராகுலை யார் மதிக்கிறார்?


Balasubramanyan
ஜூலை 21, 2025 13:57

It is time to pack these rowdies from parliment. Are they representing us. They say they are saviours for rule and constitution. But they behave as third rate persons. Voice of Maaran.Raja, Moitra, and other goons can be heard everyday. It their salary, suspend them. Otherwise dismiss them. We don't want these goons led by the opposition leader. If you want to hear and get clarification on any matter you can raise your voice if u are not satisfied. Four months they were idle. Now they get the subsidised bonda,Baji, food in parliament canteen.. shame on them. We expected this. Moreover our Kamal Hasan is there. Now he will draw plan for his another film and he will act as opposition leader. So wasted one crore today.enjoy.


Iyer
ஜூலை 21, 2025 13:46

ஆளும் கட்சியாக இருக்க உங்களுக்கு தகுதி இல்லை என்று மக்கள் இவர்களை எதிர்க்கட்சியில் உட்கார வைத்தார்கள். எதிர்கட்சியாக பொறுப்புடன் நடக்கவும் எங்களுக்கு தகுதி இல்லை என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்


தமிழ்வேள்
ஜூலை 21, 2025 13:46

எதிர்க்கட்சி என்ற பெயரில் வலம் வரும், இந்த பாகிஸ்தானிய , வாட்டிகன் அடிமைகளை சுட்டு கொல்வது நல்லது...உண்டவீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் /செய்யும் படுபாவிகள் ...


Sudha
ஜூலை 21, 2025 13:31

இது எந்த கம்பெனிலவாவது செல்லுமா?


V Venkatachalam
ஜூலை 21, 2025 13:25

இந்த உறுப்பினர்களை பார்லிமென்ட் அவையில் இருந்து வெளியேற்ற வைண்டும்.பிறகு சம்பளம் படி வடை பஜ்ஜி போண்டா காபி இத்யாதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். பயணச்செலவை திரும்ப பெற வேண்டும். அப்பறம் எவனுமே ரகளை பண்ண மாட்டானுங்க.


sundarsvpr
ஜூலை 21, 2025 13:23

பாராளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டும் இருந்தால் போதாது. சட்டம் இயற்ற தடுக்கும் தகுதி அற்ற நபர்களை எதுவும் செய்திட இயலாதபோது மன்ற தலைவர் ஏன் ராணுவ உதவியை நாடக்கூடாது? எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற மட்டும் ராணுவம் இல்லை. மன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடத்துவதும் தேசிய பாதுகாப்புதான்.


Madras Madra
ஜூலை 21, 2025 12:56

அமளி துமளி வேற உருப்படியா எங்களுக்கு எதுவும் தெரியாது பா ஜா கா வை தோற்கடிக்கவும் முடியாது ஹி ஹி


முக்கிய வீடியோ