உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தியது ஆந்திரா

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தியது ஆந்திரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ஆந்திர அரசு நிறுத்தி வைத்து உள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மாநில அரசு அமைத்து உள்ளது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்து இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.இது தொடர்பாக ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ் கூறியதாவது: திருப்பதி லட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எங்களது குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியதுடன், சிலரிடம் வாக்குமூலம் பெற்று ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

krishnan
அக் 03, 2024 17:36

த. வே.க. ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் படாத பாடு பட்டு திமுக அரசிடம் இருந்து தன் கட்சியின் முதலாவது மாநாடு நடந்த அனுமதி பெற்றுள்ளார். ஆனால் தானும் திராவிட பாரம்பரியம் தான் என்று நிரூபிக்க இஸ்லாமியர்களின் மிலாடி நபிக்கு, கேரளத்தின் ஓணத்திற்கு வாழ்த்து சொன்னவருக்கு தமிழகத்தின் பிள்ளையார் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் கேரளத்தின் ஓணமும் ஒரு இந்துப் பண்டிகை தானே? தெரியாதா? இந்துக்களிடம் இருந்தும் இந்து மத நம்பிக்கைகளில் இருந்தும் விலகி இருக்க விரும்பும் நீங்கள் இப்போது மட்டும் உங்கள் மாநாட்டுக்கு இந்துக்களைப் போல பூமி பூஜை போடுகிறீர்களே? ஏன் வெளி வேஷம்? உங்கள் திராவிட ஓட்டுறவு இப்போது எங்கே போனது?


gvr
அக் 02, 2024 15:54

Why does Supreme court not condemn political parties which practice minority appeasement? Why are hindu temples being administered by government departments and ministers?


தமிழ்நாட்டுபற்றாளன்
அக் 01, 2024 21:52

கடவுளை வெச்சி பிழைக்கும் மதவாதிகளை சாடியுள்ளது APEX COURT ,கடவுள் சர்வ வல்லமை உள்ளவர். இவர்கள் என்னவோ அவரை காப்பாற்றுவது போல சீன்


Ramesh Sargam
அக் 01, 2024 20:36

நாட்டில் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் உச்சநீதி மன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டவேண்டுமென்றால், பல முக்கியமான பிரச்சினைகளுக்கு முடிவே கிடைக்காது. அரசியல்வாதிகள் போடும் வழக்குகள், அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் இப்படி ஏராளமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன.


venugopal s
அக் 01, 2024 20:27

சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும், டும்!


Nagarajan S
அக் 01, 2024 20:09

இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கைகளையும், சனாதன தர்மத்தையும் தொடர்ந்து மீடியாக்களின் மூலம் தாக்குதல் நடத்துபவர்களுக்கு இதுவரை சுப்ரீம் கோர்ட் எந்த தடையையம் விதிக்கவில்லை.


அப்புசாமி
அக் 01, 2024 18:13

புரளியை கிளப்பினவர் அசிங்கப்பட போறார்.


saravan
அக் 01, 2024 17:48

இந்து மத துவேசம் செய்த எதனை பேரை இந்த நீதிமன்றம் கட்டுப்படுத்தியது....


Kasimani Baskaran
அக் 01, 2024 17:31

எந்த ஊரில் ஒரு உணவுப்பொருள் - அதுவும் கெட்டுப்போகாதது - அதன் சந்தை விலையில் நான்கில் ஒரு பங்கு விலைக்கு பெரிய அளவில் குத்தகைக்கு விற்கப்படும்? கலப்படம் இல்லாமல் அது சாத்தியமில்லை. கள்ளத்தனம் செய்தவர்களை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்தால் உண்மை வெளிவரும். மத உணர்வுகளை புண்படுத்தும் பொழுது ஒவ்வொரு உண்மையான இந்துவும் கேள்வி கேட்கத்தான் செய்வான். நீதிமன்றத்துக்கு மத உணர்வுகளில் தலையிட அரசியலமைப்புச்சட்டம் உரிமை ஒன்றும் கொடுக்கவில்லை.


J.V. Iyer
அக் 01, 2024 17:14

இவர்கள் சபரிமலை கோவில் பிரச்சினையின்போது எங்கே போனார்கள்? கேவலம்.


சமீபத்திய செய்தி