உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (ஜூலை 28) நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7n21twj5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள தயங்குவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

* எந்த ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.* வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நிராகரிக்க கூடாது.* ஆவணங்களில் எதுவும் பிரச்னை இருந்தால் தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.* ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

M S RAGHUNATHAN
ஜூலை 29, 2025 15:50

இனி தீவிரவாத செயல்கள் நடப்பதாக சொல்லப் படும் இடங்களில், நாட்டின் எல்லைப் பகுதிகள், கலவரப் பகுதிகளாக சொல்லப் படும் இடங்களில் நாட்டின் பாதுகாப்பு படைகளை, காவல் துறையினர் ஆகியோருக்கு அந்த அந்த இடத்திலேயே சென்று தக்க உத்தரவுகளை நீதிபதிகள் கொடுக்க வேண்டும். ராணுவ, காவல் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் எல்லாம் தேவை இல்லை. ஏன் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை போன்றவையே தேவை இல்லை.


M S RAGHUNATHAN
ஜூலை 29, 2025 15:39

இனி தேர்தல் ஆணையத்திற்கு பதில் உச்ச நீதி மன்றமே தேர்தல் ஆணையத்தின் பணிகளை மேற்கொள்ளலாம். வர வர நீதி மன்றங்களின் குறுக்கீடுகள் மிக அதிகமாக இருக்கின்றன.


தத்வமசி
ஜூலை 28, 2025 21:33

நாட்டை விட்டுக் கொடுப்பதில் நீதிமன்றமும் முன் வந்து நிற்கிறது போல தெரிகிறது.


Shankar
ஜூலை 28, 2025 19:24

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களும் நம்முடைய ஆதார் அட்டை வைத்துள்ளார்கள். அப்படியென்றால் அவர்களுடைய பெயர்களை நீக்கக்கூடாதா நீதிபேதி அவர்களே. நீங்கள் நீதிபதிகள் என்றால் உங்கள் வேலைகளை மட்டும் செய்யுங்கள். உங்களுக்கு நீங்களே கடவுள் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம்.


Rathna
ஜூலை 28, 2025 19:13

கனம் அப்போ சொன்னது வேற வாயி இப்போ வேற வாயி.


naranam
ஜூலை 28, 2025 18:47

உச்ச நீதிமன்றம் எல்லாவற்றையும் சொதப்பி விடும்..நாட்டில் எதையும் எவரையும் ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் இது போன்ற சொதப்பல் உத்தரவுகள் மூலமாக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் பலவீனப் படுத்தி விடும்.


Chess Player
ஜூலை 28, 2025 18:43

அபத்தமானது. ஆதார் அட்டை வசிப்பிடத்திற்கான சான்று மட்டுமே என்று UPA நாடாளுமன்றத்தில் கூறியது. வாக்களிக்க, நீங்கள் ஒரு குடியிருப்பாளராக மட்டும் இல்லாமல் ஒரு குடிமகனாகவும் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு, வங்காளத்தில் முறையே இலங்கைத் தமிழர்களுக்கும் வங்கதேசத்தினருக்கும் ஆவணங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? ஏதாவது ஒரு உணர்வு மேலோங்குமா?


Sakshi
ஜூலை 28, 2025 18:15

NOW A DAYS, APEX IS DOING OUT OF CONSITUTITION ROLE. AADHAAR FOR ONLY TO BE USED FOR GOVT SUBISIDY WHICH EARLIER INFORMED BY THE MINISTRY OF FIN AND EVEN SC. NOW, AADHAAR CAN BE USED ONE OF THE DOCUMENTS FOR VOTING. THE JUDGE IS THINKING IS MORE POWER THAN PRESIDENT OF INDIA OR EVEN PRIME MINISTER. ECI HAS DONE MARVELOUS JOB FOR STREAMLINING 65 LAKHS VOTER WHO ARE NON RESIDENT OF INDIA, WHO ARE OUT OF THE WORLD. NOW, TN CM ALREADY COMPLAINED ABOUT THIS AND THIS VERDICT HE CAN ENJOY FOR UPCOMING ELECTION. SO NO NEED PARLIAMENT HENCEFORTH AND EVEN PM AND M.P ALSO NOT REQUIRED BECAUSE OF WASTE OF PUBLIC MONEY AND MLAS.. PLEASE DISSOLVE THE PARLIAMENT AND ASSEMBPLY AND GOVERN THE COUNTRY.


MUTHU
ஜூலை 28, 2025 17:46

உண்மையே. இதற்கு முன்பு பிஜேபி ஆதாரினை அனைத்து மக்களுக்குமான முதன்மை ஆவணமாக மாற்றுவதற்கு முயன்ற பொழுது உதாரணமாய் சொத்து பதிவில் ஆதார் கேட்பு மசோதா இந்த கோர்ட் அதனை மக்கள் தனி உரிமை என்று சொத்தை காரணங்கள் சொல்லி தள்ளுபடி செய்துவிட்டது.


P. SRINIVASAN
ஜூலை 28, 2025 17:45

இவர்களே ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தருவார்கள், அதை இவர்களே போலியென்று சொல்வார்கள்.. எங்கே போகிறது ஜனநாயகம்? வாக்குகளையே திருட ஆரம்பித்துவிட்டார்கள்...


Jack
ஜூலை 28, 2025 19:32

சுயநினைவுடன் எழுத வேண்டும் ..


Rajasekar Jayaraman
ஜூலை 28, 2025 22:25

நாட்டை ஓட்டுக்காக கட்டிக்கொடுத்து பேசமாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை