உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை சர்ச்சையை சந்தர்ப்பவாதமாக மாற்றுவதா: தேவசம் போர்டு ஆவேசம்

சபரிமலை சர்ச்சையை சந்தர்ப்பவாதமாக மாற்றுவதா: தேவசம் போர்டு ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலை சர்ச்சையை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றன என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்துகின்றன என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கண்டித்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையை பொறுத்தவரை விரிவான விசாரணை நடத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடத்திய சர்வதேச அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சியில் இருந்து தான் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. அதை சீர்குலைக்கும் வகையிலேயே இப்படியான பொய் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக துவார பாலகர்கள் சிலையில் இருந்த தங்க பீடம் காணாமல் போய்விட்டதாக நன்கொடையாளர் உன்னி கிருஷ்ண பொட்டி புகார் தெரிவித்திருந்தார். இதனால், கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட துவாரபாலகர்கள் பீடம், பொட்டியின் உறவினர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

நடிகர் ஜெயராம் வீட்டில்

சபரிமலை தங்க கவசம்

சபரிமலை துவாரபாலகர்கள் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசங்கள், நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் ஜெயராம் கூறியதாவது: சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பொட்டியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் ஒருமுறை, அந்த தங்க கவசங்கள் செப்பனிடுவதற்காக சென்னைக்கு வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார். உடனடியாக செப்பனிடும் ஆலைக்கு சென்று நானும், என் நண்பர்களும் பார்த்தோம். மீண்டும் சபரிமலைக்கு எடுத்துச் செல்லும்போது, வழியில் என் வீட்டில் வைத்து பூஜை செய்ய அனுமதி கேட்டேன். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதனால், என் வீட்டில் சில நிமிடங்கள் வைத்து தங்க கவசங்களுக்கு பூஜை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
அக் 05, 2025 12:54

கோவில் கருவறைக்கு முன்னால் உள்ள துவாரபாலகர் சிலையின் பாத பகுதி காணவில்லை என்பது நீதி மன்றத்தில் உள்ள பிரச்சனை. அது அதை அளித்தவரின் உறவினர் வீட்டில் கண்டு எடுக்கப்பட்டது இன்னொரு பிரச்சனை.


Barakat Ali
அக் 05, 2025 11:37

தேவசம் போர்டின் குரல் ஆளுங்கட்சியின் குரலாக ஒலிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .....


veeramani
அக் 05, 2025 10:55

இந்திய அசின் மைய்ய மின்வேதியியல் ஆராய்ச்சிக்கூடம், காரைக்குடி... இங்கு பணியில் கடந்த 37 வருடங்கள் விஞ்ஞானியாக மின்முலாம் பூசும் தொகுதியில் வேலைபார்த்தவர் என்ற முறையில் எனது சொந்த கருத்து. கோவில்களில் தங்க முலாம் பூசும் முறைகள் இரண்டு. மிக சுலபமானது. தாமிர தகட்டை மொத்தமாக சூடுபடுத்தியபின்னர், தங்கம் உடன் மெர்க்குரி - பாதரசம் கலவையை தகட்டின்மீது பூசுவர், உலர்ந்த பின்னர் தாமிரத்தகட்டை சூடுபடுத்தினால், மெரக்குரி ஆவியாக சென்றுவிடும், தங்கம் பூச்சு தாமிரத்தக்கட்டில் படியும். பின்னர் மற்ற ஒரு தொழில்நுட்பம்.. மின் முலாம் பூச்சு. இதில் தாமிர தகட்டை ஆசிட் வைத்து சுத்தம் செய்தபின்னர் பலப்பல நிக்கல் பிளேட்டிங் செய்ய வேண்டும், பின்னர் தங்கம் பிளேட்டிங் செய்யவேண்டும். இதில் வேணும் தடிமத்தில் தங்கம் பிளேட்டிங் செய்யலாம். ஆனால் சுத்த தங்கத்தை கரைசலில் கறைக்கவேண்டும். இங்குதான் கணக்கில் வராத தங்கம் வருகிறது. அதாவது விஞ்ஞான முறைப்படி கரைசலில் சிறிது தங்கம் எஞ்சி இருக்கும் இதை திரும்ப எடுக்கமுடியாது. பொதுவாக கோயில் வேலைகளில் பிளேட்டிங் நிபுணர்கள் எவரும் தங்கம் திருட்டில் ஈடுபடமாட்டார்கள். எனவே இதில் குறைபாடு உள்ளதாக தெரியவில்லை. மேலும் தங்கம் சிறுது காலத்தில் தைத்தட்டில் உள்ள துளைகள் மூலம் உள்சென்று எடை குறையவும் வாய்ப்பு உண்டு. திருவிதாங்கோர் தேவசம் போர்டு விரும்பினால் உங்களுடன் வந்து கலந்து பேச தயார் .


vbs manian
அக் 05, 2025 10:28

கேரளாவில் தங்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுவது இது முதல்முறை அல்ல.


Ramesh Sargam
அக் 05, 2025 01:18

வர வர மக்களுக்கு ஸ்வாமியின் மேல் பக்தியே போய்விட்டது. அவருடைய உடமைகளையும் திருட துணிந்துவிட்டனர். ஐயப்பா இதற்கெல்லாம் நீங்கள்தான் ஒரு முடிவுகாணவேண்டும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


முக்கிய வீடியோ