வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவில் கருவறைக்கு முன்னால் உள்ள துவாரபாலகர் சிலையின் பாத பகுதி காணவில்லை என்பது நீதி மன்றத்தில் உள்ள பிரச்சனை. அது அதை அளித்தவரின் உறவினர் வீட்டில் கண்டு எடுக்கப்பட்டது இன்னொரு பிரச்சனை.
தேவசம் போர்டின் குரல் ஆளுங்கட்சியின் குரலாக ஒலிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .....
இந்திய அசின் மைய்ய மின்வேதியியல் ஆராய்ச்சிக்கூடம், காரைக்குடி... இங்கு பணியில் கடந்த 37 வருடங்கள் விஞ்ஞானியாக மின்முலாம் பூசும் தொகுதியில் வேலைபார்த்தவர் என்ற முறையில் எனது சொந்த கருத்து. கோவில்களில் தங்க முலாம் பூசும் முறைகள் இரண்டு. மிக சுலபமானது. தாமிர தகட்டை மொத்தமாக சூடுபடுத்தியபின்னர், தங்கம் உடன் மெர்க்குரி - பாதரசம் கலவையை தகட்டின்மீது பூசுவர், உலர்ந்த பின்னர் தாமிரத்தகட்டை சூடுபடுத்தினால், மெரக்குரி ஆவியாக சென்றுவிடும், தங்கம் பூச்சு தாமிரத்தக்கட்டில் படியும். பின்னர் மற்ற ஒரு தொழில்நுட்பம்.. மின் முலாம் பூச்சு. இதில் தாமிர தகட்டை ஆசிட் வைத்து சுத்தம் செய்தபின்னர் பலப்பல நிக்கல் பிளேட்டிங் செய்ய வேண்டும், பின்னர் தங்கம் பிளேட்டிங் செய்யவேண்டும். இதில் வேணும் தடிமத்தில் தங்கம் பிளேட்டிங் செய்யலாம். ஆனால் சுத்த தங்கத்தை கரைசலில் கறைக்கவேண்டும். இங்குதான் கணக்கில் வராத தங்கம் வருகிறது. அதாவது விஞ்ஞான முறைப்படி கரைசலில் சிறிது தங்கம் எஞ்சி இருக்கும் இதை திரும்ப எடுக்கமுடியாது. பொதுவாக கோயில் வேலைகளில் பிளேட்டிங் நிபுணர்கள் எவரும் தங்கம் திருட்டில் ஈடுபடமாட்டார்கள். எனவே இதில் குறைபாடு உள்ளதாக தெரியவில்லை. மேலும் தங்கம் சிறுது காலத்தில் தைத்தட்டில் உள்ள துளைகள் மூலம் உள்சென்று எடை குறையவும் வாய்ப்பு உண்டு. திருவிதாங்கோர் தேவசம் போர்டு விரும்பினால் உங்களுடன் வந்து கலந்து பேச தயார் .
கேரளாவில் தங்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுவது இது முதல்முறை அல்ல.
வர வர மக்களுக்கு ஸ்வாமியின் மேல் பக்தியே போய்விட்டது. அவருடைய உடமைகளையும் திருட துணிந்துவிட்டனர். ஐயப்பா இதற்கெல்லாம் நீங்கள்தான் ஒரு முடிவுகாணவேண்டும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா.