உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு

திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் காஸ்ட்லியான போர் விமானம், பழுது நீக்க முடியாததால் சரக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது. திருவனந்தபுரம் அருகே நடுக்கடலில் பிரிட்டன் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான F-35B ரக விமானம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. உலகின் மிக காஸ்ட்லியான, அதிநவீன போர் விமானமாக கருதப்படும் இந்த விமானத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.640 கோடி.கடந்த ஜுன் 14ம் தேதி எரிபொருள் தீர்ந்து போனதால் இந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பிரிட்டன் கடற்படை விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த விமானத்திற்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டது. எனினும் விமானத்தை மீண்டும் கிளப்பிச் செல்ல முடியவில்லை.தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதே இடத்தில் 20 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்ய, சிங்கப்பூரில் இருந்தும் பிரிட்டனில் இருந்தும் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.கிட்டத்தட்ட 2 வாரங்கள் கடந்தும்,கோளாறை சரி செய்ய முடியவில்லை. எனவே, பிரிட்டனுக்கு விமானத்தை கொண்டு செல்ல வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக C 17 ராணுவ சரக்கு விமானம் வரவழைக்கப்பட உள்ளது.F-35B போர் விமானம், குறிப்பிட்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இல்லை. அதில் இருக்கும் தொழில்நுட்பம், தாக்குதல் திறன் ஆகியவை, உலகில் மிகவும் மேம்பட்டதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gokul Krishnan
ஜூலை 04, 2025 10:40

இந்திய கடற் பகுதியில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் விமானதிற்கு என்ன கண்காணிப்பு வேலை பூகோள ரீதியாக வெகு தூரம் உள்ள நாடு இங்கு ஏன் கண்காணிப்பு வேலை செய்ய வேண்டும்


sasikumaren
ஜூலை 03, 2025 22:39

இந்தியாவை மிகவும் மென்மையான அடிமை நாடு என்று நினைத்தவர்களுக்கு இப்போது இந்தியாவின் சக்தி புரியட்டும்.இந்தியாவிடமும் சி130 சரக்கு விமானம் இருக்கிறதே அதில் கூட போட்டு எடுத்து செல்லலாம் கடைசி கட்டத்தில் இந்தியாவை காப்பாற்றி விட்டது ஜெர்மனியின் அறிக்கை.


paldurai r
ஜூலை 03, 2025 22:05

காயலான் கடை சரக்கு


paldurai r
ஜூலை 03, 2025 22:04

எடைக்கு போட்ருங்க


SRISIBI A
ஜூலை 03, 2025 18:35

இதற்காக C 17 ராணுவ சரக்கு விமானம் வரவழைக்கப்பட உள்ளது.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 18:24

இதுக்கு பதிலா நம்ம காயல் வியாபாரிகள் கிட்ட கொடுக்கலாம். எடைக்கு எடை பேரிச்சம்பழமாவது கிடைக்கும். ( கொசுறு செய்தி. இந்த டப்பா மாடலை நம்நாட்டின் தலைல கட்ட டிரை பண்ணி ஏமாந்தாங்க)


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 18:20

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள்.


R.Subramanian
ஜூலை 03, 2025 17:58

விமானத்தை பல பாகங்களாக பிரித்து கொண்டு செல்வார்கள்


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2025 17:13

சரக்கு விமானத்தில் எப்படி இன்னொரு விமானத்தை கொண்டு செல்ல முடியும் ??? that much big entry / exit door is not available in any plane.


Suppan
ஜூலை 03, 2025 21:34

F35 ன் இறக்கை மிகப் பெரியது. அதை நேரடியாக C 17 சரக்கு விமானத்தில் ஏற்ற முடியாது. இறக்கைகள் அதனுடன் இணைக்கப்பட்ட சில சிஸ்டங்களை பிரித்து பிறகு C 17 சரக்கு விமானத்தில் ஏற்றுவார்கள். 2019 ல் சேதமடைந்த F35 விமானம் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டது.


Sundar R
ஜூலை 03, 2025 15:55

F35 5th gen stealth UK AF has grounded halt in Trivandrum civil airport. It is under repair since 2/3 weeks. Approximate Cost 700++ crores rupees. We detected when it entered Indian airspace near trivandrum & its supposed to be stealth i.e., invisible to radars But our proud Indian defence team found out.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை