உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடெல்லி: நம் நாட்டின் ராணுவ புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட்ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று (11.06.2024) வெளியான அறிவிப்பில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ராணுவ நடைமுறைகளின்படி இவர் வரும் 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை