உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திட்டங்களை நிறைவேற்ற இரவு, பகலாக உழைக்கிறோம்; பிரதமர் மோடி பேச்சு

திட்டங்களை நிறைவேற்ற இரவு, பகலாக உழைக்கிறோம்; பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: திட்டங்களுக்கு வெறும் அடிக்கல் நாட்டிவிட்டு பாஜ அரசு ஒதுங்கிவிடுவதில்லை; அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவு பகலாக உழைக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது; எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே உள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் ராஜஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்தபடியே ராஜஸ்தானில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடைக்காலத்திலும் இத்தனை இடங்களில் மக்கள் பெருமளவில் கூடியிருப்பதும், எங்கள் அனைவருக்கும் உங்கள் ஆசிகளை வழங்குவதும், பாஜ அரசின் முயற்சிகள் மீது உங்களுக்கு எவ்வளவு வலுவான நம்பிக்கை உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.தன்னிறைவு உங்கள் அன்பிற்கு ராஜஸ்தான் மண்ணிடம் நான் கடமைப்பட்டுள்ளேன். எண்ணற்ற வீரர்களின் துணிச்சலுக்கு இந்த மண் சாட்சியாகத் திகழ்கிறது. சுயமரியாதையை எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்க வேண்டும் என்பதை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதை நோக்கி இந்தியா இந்த மண்ணிலிருந்து ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. உழைக்கிறோம்இன்று ஒரு சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் குறிப்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டங்களுக்கு வெறும் அடிக்கல் நாட்டிவிட்டு பாஜ அரசு ஒதுங்கிவிடுவதில்லை; அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவு பகலாக உழைக்கிறோம். உத்வேகம்ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் கட்டடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்படும். இன்று ராஜஸ்தானில் 54,000 இளைஞர்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். நெருக்கடிராஜஸ்தான் மண்ணிலிருந்து இன்று நமது நாட்டின் மற்றொரு வலிமையைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரினால் உலகம் முழுவதும் ஒருவிதக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போர் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று பல முக்கிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் திணறி வருகின்றன. 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் மன உறுதியும், முயற்சிகளும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை முறியடித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆட்டையாம்பட்டிகுமார்
ஜூலை 05, 2026 18:35

அடிக்கடி சவுக்கீதாரை மெடல் வாங்க அனுப்பிட்டா உள்ளுரில் ஆட்டையப் போட வசதியா இருக்காம்...


பல்லவி
ஜூலை 05, 2026 03:47

மதுரையில் எய்ம்ஸ் வருமா வராதா இதுபோன்ற ஒரு மருத்துவமனை பேப்பரில் நடக்கிறது 1200 ஊழியர்கள் சம்பளம் மட்டும் பெற்றுக்கொண்டு வருகிறார்கள் ஆனால் வடக்கு தெற்கே மருத்துவமனை இல்லை, கிணத்தை காணோம் போல இருக்கு


krish
ஜூலை 04, 2026 20:46

பாவம் விருமாண்டி...பேதி ஆரம்பம் ஆகிவிட்டது


அப்பாவி
ஜூலை 04, 2026 20:01

நிறைய ரோடு விபத்துகள் ராஜஸ்தானில் தான் நடக்குது. மக்களை எங்கே அனுப்புறாங்களோ?


விருமாண்டி
ஜூலை 04, 2026 18:14

வடஇந்தியாவில் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதானிக்காக பல பிராந்திய விமான நிலையங்கள் Regional Airports தற்போது வணிகரீதியான பயன்பாடு இல்லாமல், விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கியிருப்பது தெரியுமா பிரதமருக்கு?. சமீபத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை மற்றும் ஊடக அறிக்கைகளின்படி, 2017-ல் உடான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 669 விமான வழித்தடங்களில் Routes கிட்டத்தட்ட 50% 333 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், வெறும் 336 வழித்தடங்களில் மட்டுமே தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. CAG அறிக்கை: முறையான திட்டமிடல் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் இல்லாததால், சுமார் ₹1,089 கோடிக்கும் அதிகமான பொதுப் பணம் செலவழிக்கப்பட்ட 83 விமான நிலையங்கள்/ஹெலிபேடுகளில் சேவைகள் தொடங்கப்படவே இல்லை அல்லது தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியைக் கையாளுவதில் போதிய கண்காணிப்பு இல்லை என்றும், இதனால் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தணிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுக்கு இவரு பேசாம வெளிநாட்டில் சுற்றிக் கொண்டி இருக்கலாம். இது போன்ற வெட்டிச் செலவு குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


விருமாண்டி
ஜூலை 04, 2026 18:04

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பெரிய அரசு மருத்துவமனை இடம் கூட கைவசப்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக மருத்துவமனை பணியாளர்கள் நியமனம் படுஜோராக நடக்கிறது. MPESB மூலம் சுமார் 1200 மருத்துவமனை உதவியாளர்கள் Hospital Assistant, மேலும் நர்சிங் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன . அந்த செய்திகள் எல்லாம் நம்ம டெய்லி ப்ளவரில் ஏன் வருவதில்லை?


விருமாண்டி
ஜூலை 04, 2026 17:56

யாரோட திட்டங்களுக்கு என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஜீ.


THE UNKNOWN MAN
ஜூலை 04, 2026 22:08

விருமாண்டி நுனிப்புல் மேயாமல் கீழே இருக்கும் முதல் கருத்தை படித்து தெளிவு பெறு. சமச்சீர் பயபுள்ளைகளுக்கு அனா ஆவன்னா கூட படிக்க தெரியல


தினகரன்,இராமநாதபுரம்
ஜூலை 04, 2026 17:55

ஐயா தசரதா தமிழை இப்படி கொல்லாதே, இப்ப நீ கருத்து போடலைன்னு யார் அழுதா? வந்துடுறானுக வேலை மெனக்கெட்டு நானும் கருத்து போடுறேன் பேர்வழி என்று....


K.n. Dhasarathan
ஜூலை 04, 2026 17:42

எங்கு உழைகிறீர்கள் பிரதமர் அவர்களே வெளிநாட்டிலா ? பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதில்லையே அப்புறம் மதுரை அய்ய்ம்ஸ் க்காக 10 வருடங்களாக உழைப்பதை சொல்கிறீர்களா ? ரொம்பத்தான், இன்னும் முடியவில்லையே ? உங்கள் மினாரிட்டி அரசை சென்ற முறையே 0 ஆக செய்வது என்று ஏன் தமிழகம் நினைக்கிறது ? இங்கு ஒன்றுமே செய்வதில்லை. கவலைப்படாதீர்கள் அடுத்தமுறை வாஸ் அவுட் தான்.


Nathansamwi
ஜூலை 04, 2026 22:37

அடுத்த முறை 2029 லோக் சபா ல அவுட் தான் ...


Nathansamwi
ஜூலை 04, 2026 16:43

இவங்க உழைச்சதை தான் பாக்குறோமே ...நீட் தேர்வு கசிவு , எத்தனால் ஏமாற்று வேலை , ராமர் கோவில் ஏமாற்று வேலை , சி பி எஸ் இ தேர்வு முறைகேடு , ஜி எஸ் டி , டெல்லி டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ் சாலை யில் ஊழல் இப்படி நீண்டு கொண்டே போகிறது ... உங்க கட்சியின் நிர்மலா ஜி , தர்மேந்தர் பிரதான், கட்கரி இவர்கள் போதும் டெபாசிட் இழக்க வைக்க


krish
ஜூலை 04, 2026 20:47

நாதன்சுவாமி.... வழக்கம் போல உனக்கு சொறிய ஆரம்பித்து விட்டதே


Nathansamwi
ஜூலை 04, 2026 21:08

ஜெலுசில் வேணுமா நண்பரே


krish
ஜூலை 04, 2026 21:09

அரைவேக்காடு நாதன்சாமி.. உன் தலைமுறை கூட இப்படி புலம்பி கொண்டு இருக்கவேண்டியது


Nathansamwi
ஜூலை 04, 2026 22:38

வாங்குன காசுக்கு மேல கூவுறான்யா ...இதெல்லாம் ஒரு பொழப்பா


krish
ஜூலை 04, 2026 23:24

அறிவிலி நாதன் சொறி சிரங்கு மருந்து வேணுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை