உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக்கரம் இல்லாமல் மும்பையில் தரையிறங்கிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி

சக்கரம் இல்லாமல் மும்பையில் தரையிறங்கிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: குஜராத்தில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் சக்கரம் இல்லாமல் தரையிறக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த பயணிகள், பத்திரமாக வெளியே வந்த பிறகு நிம்மதியடைந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குஜராத்தின் கண்ட்லா நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான கியூ 400 விமானம் மும்பைக்கு இன்று 80 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பி சென்ற பிறகு, விமானத்தின் மூக்குப்பகுதியில் இருந்த வெளிப்புற சக்கரம் ஒன்று ஓடுபாதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையரகம் மூலம் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விமானம் தொடர்ந்து மும்பைக்கு சென்றது. தரையிறங்க 20 நிமிடங்கள் இருந்த நிலையில், சக்கரம் இல்லாதது குறித்து பயணிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக மும்பை விமான நிலையத்தில் அவசரகால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. சக்கரம் இல்லாமலேயே விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கினார். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இதன் பிறகு, அந்த விமானம் அதன் ஆற்றலை பயன்படுத்தி முனையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்படுவது சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 07:48

Who oversees flight safety in India? The Directorate General of Civil Aviation DGCA is the regulatory body in the field of Civil Aviation, primarily dealing with safety issues. It is responsible for regulation of air transport services to/from/within India and for enforcement of civil air regulations, air safety, and airworthiness standards.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 23:45

புஷ்பக விமானத்தில் சக்கரங்களே இல்லை. இந்த டெக்னாலஜி எப்போதிலிருந்தே இந்தியாவில் இருக்குன்னு சொல்லலாமா?


ஆரூர் ரங்
செப் 12, 2025 21:37

கேடி பிரதர்ஸ் தின்ற பின்னர் பிளேன் வீராணம் பைப் போல ஆகிவிட்டதா?


mohan
செப் 12, 2025 20:15

மொபைல் போன் வந்த பின்னர் ,பிரிவெண்ட்டிவ் மெயின்டனன்ஸ் என்பது இல்லாமல் போனது..


Tamilan
செப் 12, 2025 19:49

கார்போரேட்டு குண்டர்கள் தங்கள் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வைக்கும் அடுத்த இலக்கு வீல் இல்லாமல் விமானத்தை இறக்க புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் . உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும் .


duruvasar
செப் 12, 2025 19:48

மாறன் ப்ரொதேர்ஸ் நடத்தின கம்பெனி அல்லவா. திராவிட மாடலை கண்டு உலகமே வியக்கிறது என்றல் அது மிகையில்லை .


அப்பாவி
செப் 12, 2025 18:50

பெரிய தேச விரோத கும்பல் ஒண்ணு இருக்கிற மாதிரி தோணுது...பணப்பேராசை பிடிச்ச கார்ப்பரேட் கும்பல் பராமரிப்பையே மறந்துட்ட மாதிரி தெரியுது.


Anantharaman Srinivasan
செப் 12, 2025 18:27

கூடிய சீக்கிரம் ஒரு பக்க இறக்கை இல்லாமல் விமானம் கிளம்பிய செய்தி வரும்.


D.Ambujavalli
செப் 12, 2025 18:11

அட, நம் ஊர் அரசு பஸ்ஸிலிருந்து டயர் கழன்று ஓடியதற்குப் போட்டியாக இப்படி விமான டயரையும் கழன்று ஓட வைத்தும் நடு வானில் stunt செய்திருக்கீறீர்களே ஆனால் ஒன்று, அத்தனை பயணிகளும் அன்று பக்திமான்களாக, உலகிலுள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருப்பார்கள்


SJRR
செப் 12, 2025 17:50

சக்கரம் கழன்று விழும் அளவுக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் வேலைபார்த்து இருக்கிறார்கள். வருத்தப்படவேண்டிய விஷயம் மட்டுமல்ல கண்டிக்கத்தக்க பதிவும் கூட.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை