உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு

பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு எடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிக்கவும், இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் போது தான் அமைதி காணமுடியும் என்று பார்லி விவாதத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசினார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் இன்று பார்லிமெண்டில் தொடங்கியது. விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து நீண்ட உரையாற்றினார்.தமது உரையில், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவர் விளக்கினார். ராஜ்நாத் சிங் பேச்சைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் எம்.பி.,க்களும் அவையில் பேசினார். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசியதாவது; நாட்டில் கொரோனா காலத்தின் போது உயிர்களை காப்பாற்றியது மருத்துவர்கள். ஆனால், பாராட்டுகள் எல்லாம் பிரதமர் மோடிக்குச் சென்றது. ஆபரேஷன் சிந்தூரில் அனைத்தையும் பணயம் வைத்தது ராணுவம்தான். ஆனால் மீண்டும், பாராட்டு பிரதமர் மோடிக்குத் தான் சென்றது.அமெரிக்க அதிபர் இந்தியர்களுக்காக முடிவு எடுப்பது என்பது வெட்கக்கேடான விஷயம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடியுடன் இருக்கும் போது அமெரிக்க அதிபர் எப்படி முடிவு செய்ய முடியும்? போர் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இல்லை என்று பிரதமர் மோடி ஏன் ஒரு முறையாவது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடவில்லை? பயங்கரவாதத்திற்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் நாங்கள் அரசின் பக்கம் நின்றோம். பாகிஸ்தானுக்கு எதிராக உண்மையாக நீங்கள் நின்றிருந்தால் உங்களை ஆதரிக்கிறோம். ஆனால் போர் நிறுத்தத்திற்கு ஏன் ஒப்புக் கொண்டீர்கள்? பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு எடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிக்கவும், இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் போது தான் அமைதி காணமுடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 19:42

இனிமேல் இழந்த காஷ்மீர் பகுதியை மீட்பது இயலாது.ஏனெனில் அங்கு உட்கட்டமைப்புகளில் பல லட்சம் கோடி முதலீடு செய்துள்ள சீனா சும்மாயிருக்காது.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 19:41

கிரிக்கெட் அணி வெற்றிபெற்றால் அந்த அணியின் கேப்டனைத்தான் புகழ்வார்கள், அந்த கேப்டன் போட்டியில் zero ரன் அடித்திருந்தாலும். அதேபோல operation sindoor வெற்றிக்கு நாட்டின் பிரதமரைத்தான் புகழ்வார்கள், அவர் நேரடியாக போர்க்களத்தில் பங்கு ஆற்றாவிட்டாலும். இதெல்லாம் சின்ன பசங்களுக்கு கூட புரியும். ஆனால் இந்த திரிணாமுல் எம்பிக்கு புரியவில்லையே.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 28, 2025 19:11

இந்தியா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலத்தை மீட்க வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இது தவிர இன்னும் மூ திரு முக்கியமான தேவைகள் இருக்கின்றன. 1. இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவாக வேண்டும். அப்போதுதான் போர் செய்வதற்கான பொருள் வளம் நம்மிடம் இருக்கும். 2. ராணுவம் அதிநவீன யுக்திகளையும், போர் தளவாடங்களையும், அவற்றை திறமையாக பிரயோகிக்க பயிற்சிபெற்ற, திறமையான மனித வளத்தையும் கொண்டிருக்க வேண்டும். 3. உள்நாட்டில் மொழி வெறி, இன வெறி, பிராந்திய வெறி இல்லாமல் மக்களின் அடிப்படை பொருளாதாரம், கல்வி அறிவு, தேச ஒற்றுமை மூன்றும் குறிப்பிடத்தக் அளவு உயர்ந்திருக்க வேண்டும். இவை எல்லாமே நடக்கும். இந்தியா அந்த திசை நோக்கியே பயணிக்கிறது. அனைத்தும் நலமாக நடக்க இன்னும் இரண்டு தசாப்தங்கள் ஆகலாம். ஆனால் அர்ஜுனன் போல வெற்றி அடையும் வரை ஓயாது முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் ஆகாதது ஒன்றில்லை.


Anand
ஜூலை 28, 2025 19:10

இப்படி சொன்னால் உன்னை தீதி அடித்து விரட்டுவாரே, அவரோட பொழப்பில் மண்ணை போட்டுவிடுவாய் போலிருக்கு.


பேசும் தமிழன்
ஜூலை 28, 2025 18:52

ஏம்பா... நீங்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.... உங்களை போன்ற இண்டி கூட்டணி ஆட்களை வைத்து கொண்டு எப்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்படி மீட்பது..... இந்திரா பிரதமராக இருந்த போது.... நம்மிடம் சரண்டரானா 90000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை.... எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்தது எவ்வளவு பெரிய தவறு.... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியே போனால் மட்டுமெ.... வீரர்களை விடுதலை செய்ய முடியும் என்று கறாராக கூறி இருக்க வேண்டும்.


B N VISWANATHAN
ஜூலை 28, 2025 18:49

போக விஷயத்தை மத்திய அரசு அல்லது ஒன்றிய அரசு பாத்துக்கும். முதல்ல இந்த மேப் அவரோட தலைவி கிட்ட சொல்லி வங்க தேச ஆசாமிகள் அவங்க மாநிலத்துக்குள் ஊடுருவல் இல்லாம ஆட்சி செய்ய சொல்லுங்க. அது போதும்.


Indian
ஜூலை 28, 2025 18:49

ராணுவத்தை அனுப்பி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்து உள்ள காஷ்மீரை இந்தியா வோடு இணைக்க வேண்டும் .


Balaa
ஜூலை 28, 2025 18:43

உங்க ஊர்லேந்து வங்க தேசத்தவரை வெளிய அனுப்புங்க. இஸ்லாமியர் ஓட்டுக்காக துதி பாடறீங்க.


ஈசன்
ஜூலை 28, 2025 17:42

திரிணமுல் எம்பி கல்யாண் சிறுபிள்ளை தனமாக பேசுகிறார். பண மதிப்பிழப்பு கொண்டு வந்த போது, செயல்படுத்தியது ரிசர்வ் வங்கி. ஆனால் அதற்கு மோடிஜி காரணம் என்று புலம்பி தீர்த்தீர்களே. இப்போது ஆபரேஷன் சித்தூர் என்று ராணுவ தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதற்கு எப்படி மோடிக்கு பெருமை போகிறது என்று கேட்கிரீர்களே. அறிவுடன் தான் பேசுகிறீர்களா? சரி அதை விடு. ஆக்ரமிப்பு காஷ்மீரத்தை மீட்க ராணுவத்துடன், TMC குண்டர்களையும் ரவுடிகளையும் அனுப்புகிறீர்களா. மீட்டு கொண்டு வந்தால் அதன் பெருமையை மம்தாவுக்கு அர்பணிக்கிறோம். செய்வீர்களா?


KRISHNAN R
ஜூலை 28, 2025 17:36

இப்ப என்ன நான் சொல்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை