உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?

கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் மீது மேலும் ஒரு செக்ஸ் புகார் வழக்கு பதியப்பட்டு உள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு இருப்பதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இந்தியன் கிரிக்டெ் பிரீமியர் லீக் ராயல் சேலஞ்சர் அணியின் வீரராக ஆடி வருபவர் யாஷ்தயாள். இவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காஸியாபாத்தில் ஒரு இளம்பெண், தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை ஏமாற்றி உடல் ரீதியாக துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார். இந்த புகாரில் கோர்ட்டுக்கு சென்ற தயாள் போலீஸ் விசாரணைக்கு தடை பெற்றார்.

2வது செக்ஸ் புகார்

இந்நிலையில் ஜெய்ப்பூரில் கிரிக்கெட் போட்டி நடந்த போது ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி செக்ஸ் தொந்தரவு செய்துள்ளார். இவர் தற்போது அளித்த புகாரின்படி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் யாஷ்தயாள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை