வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்புறம் பெண்கள் ஓட்டு பாஜகவுக்கு எப்படி கிடைக்கும்?
தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
முஸ்லீம் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும்..... அவர்களின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்...... பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல.... அவர்களும் மனிதர்கள் தான்..... அவர்கள் எல்லாம் அவர்கள் விருப்பம் போல் இருக்க விட வேண்டும்.
பெண் படகோட்டடிகள் கடலில் இறங்கி மீன் பிடிப்பார்களா. . ஆண்களை போல் முதுகில் மூட்டை தூக்கி வேலை செய்வார்களா. ஆண்களும் பெண்களும் சரிசமமென்பவர்கள் எல்லாத்துறையிலும் 50:50 வேலையில் அமர்த்தலாமே. ஆண் பெண் இருவரும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க புறப்பட்டு பெத்த பிள்ளைகளை பரிதவிக்க வைக்கிறார்கள். இதனால் தற்கொலை, பாலியல் தொல்லைகள் அதிகரித்து உள்ளன சாமி
எல்லாம் தமிழ் நாட்ல நடக்குதுன்னு நேரா சொல்லுங்க பத்மஶ்ரீ சாமி
மீன் பிடிக்கும் தொழில் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள், மூட்டை தூக்கும் பெண்களும் இருக்கிறார்கள், ஏன் செய்யும் வேலை எல்லாம் பெண் செய்ய முடியுமா என்று விதண்டாவாதம் எதற்கு? அப்படி ஆரம்பித்தால், பத்து மாதம் வயிற்றில் சுமந்து, உயிர் வலி சகித்து , குழந்தை பெறும் சாத்தியம் ஆணுக்கு இல்லை, இந்த வெட்டி விவாதம் ஏன்? பெண்களை மூட நம்பிக்கை என்ற பெயரில் , அடக்கி ஒடுக்காமல், கல்வி , வேலை வாய்ப்புகளில் உயர்த்துவது பற்றி யோசியுங்கள், வேலை பார்க்கும் பெண்கள் எல்லோரும் அவர்கள் குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்து கொள்ளும் கடமையையும் செவ்வனே செய்கிறார்கள், அவர்களுக்கு உறுதுணையாக அவர்கள் இல்ல ஆண் மக்கள் இருந்தாலே போதும், அதுவே பெண்களுக்கு தலையாய தேவை, பெண் சுதந்திரம் என்பது பெண்ணின் படிப்பு, வேலை , வாழ்க்கையை பெண்கள் முடிவு செய்யும் தனி உரிமை, அவள் படிக்க வேண்டும் என்பதை அடுத்தவர் முடிவு செய்வது அல்ல . கருத்து போடும் போது , கொஞ்சம் யோசித்து போடுங்கள்.
தற்கொலை, பாலியல் தொல்லை அதிகரித்தால் ,பெண்ணை வீட்டுக்கு உள்ளேயே பூட்டி வைத்து விடலாம் என்கிறீர்களா? ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவை கொடுத்து வளருங்கள், பெண் பிள்ளைகளை கற்காலத்திற்கு இட்டு செல்லும் வேலையை விடுங்கள்.
பெண்ணை குழந்தை பெற்றெடுக்கும் வெறும் மெஷினாக இந்தியாவில் ஒரு கும்பல் போர்த்தி வைத்திருக்கிறது. விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கல்வி மற்றும் வேலை செய்ய அனைத்து பெண்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை