உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் நிதியை சுரண்டுகிறீர்கள் : மம்தா மீது நிர்மலா பாய்ச்சல்

மத்திய அரசின் நிதியை சுரண்டுகிறீர்கள் : மம்தா மீது நிர்மலா பாய்ச்சல்

புதுடில்லி ;மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை சுரண்டி, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் விமர்சித்தார்.பட்ஜெட் குறித்த விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது.இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவரது உரைக்கு, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த நிர்மலா சீதாராமன் பேசியதாவது:மத்திய அரசின் நுாறு நாள் வேலைத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை முறைகேடாக பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரசார் பயன்படுத்தி உள்ளனர்.மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்ததுடன், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுத்து நிறுத்தி உள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வரும் மற்ற மாநில அரசுகளுக்கு இதுவரை 25,798 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் இத்திட்டம் முறைகேடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.இதுகுறித்து முறையான விளக்கமும் அளிக்கவில்லை.இதேபோல் நுாறு நாள் வேலைத்திட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக போலி கணக்கு காண்பித்து, மக்களின் வரிப்பணத்தை திரிணமுல் காங்., நிர்வாகிகள் கொள்ளையடித்துள்ளனர். தற்போது, மேற்கு வங்கத்தில் புதிய வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள், மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்யும் எதிர்கால திட்டங்களோ இல்லை.கடந்த 2021 - 22 நிதியாண்டின்படி, மாநிலத்தின் உற்பத்தி திறன் தேசிய அளவில் ஒப்பிடும்போது 3.5 சதவீதமாக சரிந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

jayvee
பிப் 13, 2025 11:18

உண்மைதான் .. மத்தியஅரசு நிதிமட்டுமில்லை மாநில வருமானத்தை கூட சரியான முறையில் பயன்படுத்த மம்தா அரசு முனைவதில்லை.. கொல்கத்தா ஒரு அழுக்கு நகரம் என்பதே இதற்க்கு சாட்சி.. தலைநகரமே இப்படி உள்ளது மேற்கு வங்காளத்தில் உள்ள பிற மாவட்டங்களை நினைத்து பாருங்கள்.. கொல்கத்தாவில் ஒரு நல்ல விஷயம் உள்ளதென்றால் அது மெட்ரோதான் ..அதுவும் ரயில்வே துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது


K.n. Dhasarathan
பிப் 12, 2025 17:13

நாட்டாமை அம்மா தீர்ப்பை மாற்றி சொல்கிறாரா ? பொய் ஜே பி அல்லாத மாநிலங்களுக்கு கொடுக்கிற நிதி மிகவும் குறைவு, சால்ஜாப்பு மிக மிக அதிகம், இதில் நிதி அமைச்சருக்கு என்ன பாய்ச்சல் வேண்டி இருக்கு ? சொல்வதெல்லாம் பொய்கள், ஆதாரமில்லாத குற்ற சாட்டுகள் இதை தவிர நிர்மலா அமைச்சருக்கு என்ன தெரியும் ? சவால் விடுகிறேன், தமிழகத்தை நிதி தராமல் ஏமாற்றியது உண்மையா இல்லையா என்று தமிழக நிதி அமைச்சருடன் விவாதிக்க தயாரா ?


guna
பிப் 12, 2025 19:56

தமிழக நிதி அமைச்சர் மூடிட்டு இருக்காரு.....இந்த தசரதன் எப்படி கோர்த்து விடுது பாத்தீங்களா....மானம் போயிடும்... ..


venugopal s
பிப் 12, 2025 14:38

மத்திய அரசுக்கு நிதி ஆதாரமே மாநிலங்கள் தான் என்பது மத்திய நிதி அமைச்சருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது!


ஆரூர் ரங்
பிப் 12, 2025 15:07

ஒன்றியம் எனும் வார்த்தையே தவறு. மத்திய அரசுதான் நாட்டை ஆளுகின்றது. மாநிலங்கள் மத்திய நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தின தற்காலிக கிளைகள் மட்டுமே.


subramanian
பிப் 12, 2025 16:57

அருவருக்கத்தக்க பிழைப்பு நடத்தும் வேணுகோபால்.


M Ramachandran
பிப் 12, 2025 12:47

மம்தாவின் கெட்டிக்காரியின் புளுகு டக்குமுக்கு டிக்கு தாளம்.


M Ramachandran
பிப் 12, 2025 12:44

அது எப்படி லூட் அடிப்பது என்பதை மம்தா ஸ்டாலினுக்கு விளக்கினால் மிக்க உபயோகமாய் இருக்கும்


ஆரூர் ரங்
பிப் 12, 2025 11:45

மாநில அரசுகள் அளிக்கும் இலவசங்கள் பொதுமக்களிடையே உழைத்துப் பிழைக்கும் எண்ணத்தையே குறைத்துவிட்டன. நேற்று இதனைப் பற்றி குறிபிட்ட லார்சன் அண்டு டூப்ரொ நிறுவனத்தின் தலைவர், வடமாநிலங்களில் கூட பல்லாயிரம் கட்டுமான ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ளார். பல திட்டங்கள் தடைபட்டுள்ளன. இப்படியே போனால் நாடு வளர்வது கஷ்டம்தான்.


Barakat Ali
பிப் 12, 2025 11:00

மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநிலங்கள் கையாடல் செய்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே???


Harindra Prasad R
பிப் 12, 2025 12:06

எப்படி எடுப்பது என்று விவரம் சொல்லுங்களேன் .... திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .... சர்க்கரை எங்கே எறும்பு சாப்பிட்டுவிட்டது கோணி எங்கே கரையான் அரித்துவிட்டது . எப்படி ப்ரூப் செய்வது.


sankaranarayanan
பிப் 12, 2025 10:17

கொடுத்த பணத்திற்கு ஒழுங்காக கணக்கு காட்டாத எந்த மாநிலத்திர்க்கும் மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு இனி அதிக நிதி கொடுக்கமாட்டார் இதுக்குதான் மரபு இதை அவர் மீறமாட்டார் அவரிடம் உங்களது பூச்சாண்டி வேலைகள் பலிக்காது கொடுத்த பணத்தை அந்தந்த திட்டத்திற்கு செலவுசெய்த கணக்கை கொடுக்க ஏனிந்த தயக்கம்


Laddoo
பிப் 12, 2025 08:03

புள்ளிக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் எல்லாமே மக்களின் வரிப் பணத்தை சுரண்டி பிழைப்பவை தானே


Ramaraj P
பிப் 12, 2025 07:28

பாஜக தான் இனிமேல் மத்திய அரசு. மாற்றுக் கட்சி எதுவும் இல்லை.


முக்கிய வீடியோ