ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., அரசு தேர்வில் ஈங்கூர் யுனிக் அகாடமி பள்ளி சாதனை
பெருந்துறை: ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., அரசு தேர்வில், ஈங்கூர் யுனிக் அகாடமி பள்ளி சாதனை படைத்துள்ளது.பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி, 2025-26 கல்வியாண்டில் ஐ.சி.எஸ்.இ., (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் தொடர்ந்து, 14வது ஆண்டாகவும், ஐ.எஸ்.சி.,யில் (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத் தேர்வுகளில், 12வது முறையாகவும், 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.ஐ.எஸ்.சி., (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்வில், கேதர்நாத்ஜி, 94 சதவீதம் மதிப்பெண்களுடன் முதலிடம், நிகிதா, 93 சதவீதம் மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், இனியா, 89 சதவீதம் மதிப்-பெண்களுடன் மூன்றாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.ஐ.சி.எஸ்.இ., (பத்தாம் வகுப்பு) தேர்வில், ஆத்விகா, 96 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கில இலக்கியம் மற்றும் ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ., பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடம், அருணிகா, 95 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், அபி நந்தனா, 93 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மேலாண்மை வல்லுனர்களை, பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.