வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன் குறித்த கள ஆய்வு
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்திறன் குறித்த கள ஆய்வு ஆசிரியர்களால் இன்று (ஆக.,26) மேற்கொள்ளப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பில் 45 பள்ளிகளில், ஒரு பள்ளியில் தலா 30 மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்படுகின்றன. இதில், காலையில் தமிழ், ஆங்கில பாடங்களின் வாசிப்பு, எழுத்து திறனும், பிற்பகலில், அடிப்படை கணித அறிவும் குறித்தும் சோதிக்கப்படும். இதுதொடர்பான கேள்விகளுக்கு, ஒன்றரை மணிநேரம் மாணவர்கள் பதில் அளிக்கின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் சி.இ.ஓ., பார்வதி, உதவித் திட்ட அலுவலர் மீனாட்சி, டி.இ.ஓ., ஜெயமீனா தேவி, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.