உள்ளூர் செய்திகள்

ஆசிய கராத்தே போட்டிக்கு அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

காரைக்குடி: ஆசிய அளவில் டிசம்பரில் நடக்க உள்ள கராத்தே போட்டிக்கு காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையில் நடந்த தேசிய அளவிலான 12-13 வயதுக்கு உட்பட்டோருக்கான கராத்தே போட்டியில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ரமணன் முதல் பரிசையும், ரவிச்சந்திரன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். இவர்கள் வரும் டிச.10 முதல் 15 வரை சிங்கப்பூரில் நடக்கும், ஆசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர். இதே பள்ளியை சேர்ந்த ஷாலினி, பிரவீனா ஆகியோர் ராஜ பாளையத்தில் நடந்த மண்டல அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில், முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்