உள்ளூர் செய்திகள்

சிறுவர்களுக்கு வாகனம் கொடுத்தால் பெற்றோருக்கு சிறை என எச்சரிக்கை

பெங்களூரு: சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது குற்றம். இவர்களுக்கு வாகனம் கொடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்தார்.பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியின், ஐ.ஐ.டி., கல்லுாரி ஆடிட்டோரியத்தில், மக்கள் தொடர்பு கூட்டம் நடந்தது. இதில் நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா பேசியதாவது:18 வயதுக்கு உட்பட்ட, சிறுவர் - சிறுமியர் எவ்வளவு ஸ்மார்ட் ஆக இருந்தாலும், மொபைல் போன் உட்பட, மற்ற தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தும் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வாகனம் கொடுக்கக் கூடாது.ஒரு நபருக்கு, 18 வயதுக்கு பின்னரே, டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்பதற்கு, அறிவியல் ரீதியில் பல காரணங்கள் உள்ளன. சிறுவர் - சிறுமியருக்கு மூளை அவ்வளவாக வளர்ச்சி அடைந்திருக்காது.தங்கள் பிள்ளைகள் அதிக புத்திசாலிகள், 10 வயதுக்கே இருசக்கர வாகனம் ஓட்டுகின்றனர், 15 வயதில் கார் ஓட்டுகின்றனர் என்ற பெருமையில், வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர்.18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, பெற்றோர் வாகன சாவியை கொடுப்பது, ஆயுதத்தை பிள்ளைகள் கையில் கொடுத்ததை போன்றாகும். பொது இடங்களில் சிறு வயதினர், வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் மீது ஜாமின் இல்லாத சட்டப்பிரிவின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்படும்.புனேயில் தொழிலதிபர் சொகுசு காரை, தன் சிறு வயது மகனிடம் கொடுத்து, இருவரின் இறப்புக்கு காரணமானார். சிறுவர் அல்லது சிறுமியர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, வீலிங் செய்தால் இவர்களின் தாய், தந்தை சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் புத்திமதி கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்