உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி: நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது: நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசுடன் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த இண்டியா கூட்டணி விரும்பியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பார்லிமென்டில் அதனை செய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கியமான விஷயம். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்