கூடுதல் அரசு வழக்கறிஞர் பணியிடங்கள்; தமிழக அரசு விண்ணப்பம் வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூன் 16.அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை நடந்த போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் இல்லாததால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என, கடிதம் கொடுக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள் 'புதிய அரசு பொறுப்பேற்று இவ்வளவு நாள் ஆகியும், ஏன் இன்னமும் அரசு வழக்கறிஞர்களை நியமிக்காமல் இருக்கிறீர்கள்?' என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூன் 16. மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் குறைந்தது 7 ஆண்டுகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.