உள்ளூர் செய்திகள்

வகுப்பறையில் மோதல்; தாக்கப்பட்ட மாணவன் பலி

எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ், 16, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.இவருக்கும், மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. இருவரும் வகுப்பறையில் தாக்கி கொண்டதில், ஆகாஷ் மயங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு துாக்கி சென்றனர்.அங்கிருந்து எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில், ஆகாஷ் இறந்தது தெரிந்தது. தன் செருப்பை மறைத்து வைத்தது தொடர்பாக, மாணவனை தட்டிக்கேட்டு ஆகாஷ் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.ஆகாஷை தாக்கிய மாணவனை பிடித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்