உள்ளூர் செய்திகள்

பள்ளியில் காய்கறி தோட்டம் குறைந்த தொகையால் முடக்கம்

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைக்க, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி, மாணவர்கள் குழு அமைத்து, காய்கறித் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் கைகழுவும் நீர், சமையலறையில் பயன்படுத்தம் நீரை தோட்டத்திற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இடவசதியுள்ள அரசு பள்ளிகளில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, காய்கறித் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்கு, 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தொகை ஒதுக்கீடு செய்வதால், பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:உள்ளூர் காய்கறிகளை பயிரிடவும், அதற்கு வேலி அமைத்தல், களைஎடுத்தல், உரமிடுதல், மண்புழு உரம் பயன்படுத்தி தோட்டத்தை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை, மதிய சத்துணவில் பயன்படுத்த வேண்டும்.சிலர் மட்டுமே காய்கறி தோட்டம் அமைக்க முனைப்பு காட்டுகின்றனர். இதற்கான தொகை முறையாக விடுவிப்பதும் கிடையாது. சொந்த செலவில், காய்கறி தோட்டம் அமைக்க ஆசிரியர்கள் முன்வருவதில்லை.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்