உள்ளூர் செய்திகள்

கூரை பெயர்ந்து விழுந்தபோது குழந்தைகள் இல்லை; கடவுளுக்கு நன்றி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.இந்நிலையில், இன்று அந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வழக்கமாக அங்கு குழந்தைகள் இருக்கும் சூழலில், இந்த அசாதாரணமான சம்பவத்தின் போது அந்த அறையில் பள்ளிக்குழந்தைகள் யாரும் இல்லை. இதனால் நல்வாய்ப்பாக குழந்தைகள் காயமின்றி தப்பினர்.இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறியதாவது: கட்டிடம் கட்டி, 3 மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள்ளாக புதிய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை மீது கேள்விக்குறி எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கல்வித்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்த பின்னரே குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்