உள்ளூர் செய்திகள்

பெற்றோரே உஷார்: குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா அதிகரிப்பு

சென்னை: குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.காலநிலை மாற்றம் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்பு சளியால் ஏற்படும், வாக்கிங் நிமோனியா என்ற பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:குழந்தைகளுக்கு சுவாச தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல், இருமல் அதிகம் ஏற்படுகிறது. மைக்கோபிளாஸ்மா நிமோனியா நோய்த் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். தாமதமாக சிகிச்சை மேற்கொண்டால், தொற்று பாதிப்பு ஏற்படும்.ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த 2 மாதங்களாக தான், வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஒரு குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் மற்றும் சளி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருந்தால் வாக்கிங் நிமோனியா நோய்த்தொற்றுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் கூறியுள்ளார்.அறிகுறிகள் என்னென்ன?குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டால், என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் டாக்டர்கள் கூறியதாவது:* சளி,* காய்ச்சல்,*இருமல்* சுவாச பிரச்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்