மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கோரி , சென்னையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் , கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி , இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்கடந்த இருபத்து ஆறாம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி , சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி . பி . ஐ . வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர் . போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர்இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் , சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.மூன்றாம் நாளாக நேற்று , சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு , நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் . போலீசார் விரைந்து வந்து , போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர் . அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது . அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் , சென்னையின் பல்வேறு பகுதிகளில் பத்து திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். தங்களின் போராட்டம் இன்றும் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்