மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற, புதுப்பிக்க நவ., 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை நவ., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய முகவரியில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.பட்டியலிடப்பட்ட பள்ளி விபரங்களை சி.இ.ஓ., அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.