அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள், கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி அனுஷா 500க்கு 491 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி சமிக் ஷா 484 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் ஹன்சிகா, லயா, மாணவன் சுதர்சன் 479 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.470க்கு மேல் 9 மாணவர்களும், 450க்கும் மேல் 31 மாணவர்களும், 400க்கும் மேல் 92 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 2 மாணவிகளும், சமூகஅறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.சாதனை மாணவ, மாணவிகளை அரிஸ்டோ பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், தலைவர் சிவக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே மற்றும் துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.