உள்ளூர் செய்திகள்

விளையாட்டு ஒதுக்கீடு தேர்வு கிரசன்ட் பல்கலை அழைப்பு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பிரிவில், இலவசமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வு முகாமில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வண்டலுாரை அடுத்த பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசன்ட் பல்கலையில், இந்த கல்வியாண்டில், விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கைக்கான தேர்வு முகாம், அக்கல்லுாரி வளாகத்தில், இம்மாதம் 11ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இதில், 40 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள், கல்விக் கட்டணமின்றி சேர்த்துக் கொள்ளப்படுவர். முகாமில், இரு பாலருக்குமான பால் பேட்மின்டன், தடகளம், வாள்வீச்சு, டேக்வாண்டோ, கராத்தே, ஜூடோ, பாக்சிங், வில் வித்தை, ஸ்கேட்டிங் போட்டி ஆகியவற்றில் தேர்வுகள் நடக்கின்றன.மேலும் விபரங்களுக்கு, 97900 85085 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்