வி.ஆர்.எஸ்., கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லூரியில் கணிப்பொறித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில் கணிப்பொறித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் விஜயாமுத்துவண்ணன் தலைமை தாங்கினார். முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன், முதல்வர் அன்பழகன், துறைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். கோவை பைகாசாப்ட்டெக் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் செந்தில்முருகன் கருத்தரங்கை துவக்கி வைத்து, மேககணினி என்ற தலைப்பில் பேசி, பயன்பாடு குறித்து விளக்கினார். மாணவி சாந்தி பிரியா நன்றி கூறினார்.