பள்ளி முதல்வர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்
புதுடில்லி: மோசமாக பராமரிக்கப்படும் அரசு பள்ளி முதல்வர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடா கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் ஆயிரம் அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளில் சுகாதாரம் பராமரிப்பது குறித்து ஒரு பள்ளிக்கு நான்கு பேர் வீதம் 225 குழுக்கள் அமைக்கப்படும். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத பள்ளி முதல்வர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.