உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் அட்டவணை மாற்றி வெளியீடு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு பொதுப்பிரிவு கவுன்சிலிங் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, மாற்றி அமைக்கப்பட்ட முதல் சுற்று கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி மாணவர்கள் தங்களின் விருப்பக் கல்லுாரிகளை ஆக.12 மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம்.மாணவர் சேர்க்கை ஆணை ஆக.14ல் வெளியிடப்படும். முதல் சுற்றில் சேர்க்கை ஆணை பெற்றவர்கள் ஆக.22 மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என மாணவர் சேர்க்கைகுழு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்