மாநில கால்பந்து போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் இன்ஜி., மாணவர்கள் மாநில கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.திருச்சி கே.ராமகிருஷ்ணன் இன்ஜி., கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து விளையாடின.இறுதிப் போட்டி ஸ்ரீ ராஜராஜன் இன்ஜி., கல்லூரி மற்றும் திருச்சி என்.ஐ.டி.,க்கும் இடையே நடந்தது. முதல் சுற்று சமநிலையில் நடந்ததால், டை பிரேக்கர் நடந்தது.இதில், ஸ்ரீ ராஜராஜன் இன்ஜி., கல்லூரி இரண்டாமிடம் பிடித்தது. மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர் சுந்தரையும் கல்வி குழுமத் தலைவர் சுப்பையா, முதல்வர் முத்துக்குமார் டீன் சிவக்குமார் பாராட்டினர்.