உள்ளூர் செய்திகள்

வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வடலுார்: வள்ளலார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.வடலுார் அடுத்த கொள்ளுக்காரன் குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவிகள் பாரதி, கீதா இருவரும், 491 மதிப்பெண் பெற்றனர்.மாணவிகள் தீக்ஷிதா, 490 மதிப்பெண்களும், தர்ஷினி, 489 பெற்றுள்ளனர். மேலும், மாணவி சஹானா, 488 பெற்றுள்ளார். கணிதத்தில், 5 மாணவர்களும், அறிவியலில், 16 மாணவர்களும், சமூக அறிவியலில், 2 மாணவர்களும், 100 மதிப்பெண்கள் பெற்றனர்.தமிழில், 2 மாணவர்களும், ஆங்கிலத்தில் மூவரும், 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். 480 க்கு மேல், 18 மாணவர்களும், 475க்கு மேல், 31 மாணவர்களும், 450க்கு மேல், 60 மாணவர்களும், 400க்கு மேல், 194 மாணவர்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் வள்ளலார் கல்வி குழுமம் சார்பாக பாராட்டி கேக் வெட்டி, சால்வை அணிவித்து கவுரவித்தனர். பள்ளி தாளாளர் சுப்ரமணியன், இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்